பறவைகள் பற்றி பலனுள்ள கலந்துரையாடல்.. லாக்டவுனில் முடங்கியுள்ள குழந்தைகளுக்கு குஷி தகவல்
சென்னை: லாக்டவுன் நீடிப்பு காரணமாக, 20 நாட்களாக வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருப்பீர்கள். சாப்பிடுவது தூங்குவது.. அல்லது தூங்கிவிட்டு சாப்பிடுவது.. இப்படி இரண்டு வகையான செயல்களை மட்டும், மாற்றி மாற்றி செய்து செம கடுப்பாக இருப்பீர்கள். உங்களுக்கே இப்படி என்றால், ஓடியாடி திரியக்கூடிய குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும் என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது கிடையாது.
அதெல்லாம் தெரியுதுங்க.. டிவி பார்ப்பது, செல்போனில் கேம் ஆடுவது இதை தவிர்த்து குழந்தைகளுக்கு வேறு என்னதான் பொழுது போக்கு இருக்கிறது.. அதை சொல்லுங்க பாஸ், என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஓவியங்கள் வரைவது, அல்லது அடுத்த வகுப்பு பாடத்தை இப்போதே படியுங்கள் என்பது போன்ற வழக்கமான ஸ்டீரியோடைப் பதிலை நாங்கள் சொல்லப் போவது கிடையாது. இதையும் தாண்டி மேலும் பல்வேறு விஷயங்கள், நம்மை சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
நாம்தான் கவனிக்கத் தவறுகிறோம். அப்படியான ஒரு விஷயம்தான், பறவைகள் பற்றி அறிந்து கொள்ளவும், அன்பு செய்யவும், குழந்தைகளுக்கு கிடைத்துள்ள ஒரு அரிய வாய்ப்பு.
பொதிகைச் சாரல் என்ற அமைப்பு இப்படியான ஒரு முன்னெடுப்பை நடத்திவருகிறது. வழக்கமாக, குழந்தைகள், பெற்றோர்களை பறவை சரணாலயங்களுக்கு, நேரிலேயே அழைத்துச்சென்று நிறைய விளக்கங்கள் கொடுப்பது இந்த அமைப்பின் பணியாக இருந்து வந்தது.
சமீபத்தில்கூட இப்படியாக பள்ளிக்கரணை பகுதிக்கு குழந்தைகள் மட்டும் பெற்றோரை அழைத்து சென்று, பறவைகள் தொடர்பாக விளக்கம் அளித்தனர். பறவைகள் நல ஆர்வலர் அரவிந்தன் பறவைகள் குறித்து, விளக்கம் கொடுத்து அவர்களின் ஆர்வத்தை தூண்டினார்.

இப்போது லாக்டவுன் நடைமுறையில் இருக்கக்கூடிய சூழ்நிலையில், வீட்டிலிருந்தபடியே பயனுள்ள வகையில், பறவைகள் தொடர்பாக குழந்தைகள் அறிந்து கொள்ளும் ஏற்பாட்டை, பொதிகைச் சாரல் அமைப்பு செய்து உள்ளது. பறவைகள் நல ஆர்வலர்கள் ரவிந்திரன் இதுபோன்ற ஒரு கலந்துரையாடலை செய்கிறார்.
Zoom ஆப்பில், https://us04web.zoom.us/j/803393614 இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். அந்த கலந்துரையாடலுக்கான ஐடி எண்: 803 393 614 இதைக் கொடுத்து உள்ளே நுழையுங்கள். இந்த கலந்துரையாடலுக்கு கட்டணம் ஏதும் இல்லை.
தினமும் இரவு 7 மணி முதல் சுமார் 40 நிமிடங்களுக்கு இந்த கலந்துரையாடல் நடக்கிறது. குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு பறவையினங்கள் பற்றி ரவீந்திரன் மிகவும் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார். குழந்தைகள் தங்களுடைய கேள்விகளை அப்போதே கூட கேட்டுக் கொள்ளலாம். அல்லது, இதற்காக உள்ள வாட்ஸப் குழுவில் (குழுவில் இணைய தொடர்பு கொள்ள - வாட்ஸ் அப் எண் 9962086565) இணைந்து கொண்டு கூட, தங்கள் கேள்விகளை கேட்கலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications