பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடி.. காது, மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு அஜித் குமார் தாக்கப்பட்டுள்ளார்.. ஐகோர்ட்
மதுரை: திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதிகள், அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும் உயர் அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் விசாரணை நடக்கவில்லை, அதற்கான சிசிடிவி காட்சிகள் இல்லை என்றும், காது, மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு அஜித் தாக்கப்பட்டுள்ளார். அந்த ரத்தக்கறைகள் எங்கே? சாட்சியங்களை சேகரிக்காமல் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
இந்த வழக்கை அரசியலாக்கப் பார்ப்பதாக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்ட நிலையில், நீங்கள் எதிர் தரப்பாக இருந்தாலும் இதைத்தான் செய்வீர்கள் என்று பதில் அளித்த நீதிபதிகள், சாத்தான்குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் வழக்கை யாரும் மறந்திட முடியாது என்றும், பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் தாய் கொடுத்த புகாரில் கூட இன்னும் வழக்கு பதியப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் நகை திருட்டு புகாரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் என்ற 28 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வழக்கை தாமாக முன்வந்து ஐகோர்ட் கிளை விசாரணைக்கு எடுத்தது. நேற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நீதிபதிகள் இன்றும் காவல்துறை, அரசின் மீது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அஜித்குமார் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. சில சாட்சிகள் அழிக்கப்பட்டு இருக்கிறது தெரிகிறது. அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. உயர் அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் உள்ளது.
கொலையாளி கூட
காவல் நிலையத்தில் விசாரணை நடக்கவில்லை, அதற்கான சிசிடிவி காட்சிகள் இல்லை. ஆனால் காது, மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு அஜித் தாக்கப்பட்டுள்ளார். அந்த ரத்தக்கறைகள் எங்கே? சாட்சியங்களை சேகரிக்காமல் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? வாய் மற்றும் பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடியை தூவி இருக்கிறார்கள்.
கொலையாளி கூட இவ்வளவு வேதனையை அனுபவித்து இருக்க மாட்டார். காது மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு அஜித் குமார் தாக்கப்பட்டுள்ளார் என்று நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்தனர். அப்போது இந்த வழக்கை அரசியலாக்கப் பார்ப்பதாக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்ட நிலையில், நீங்கள் எதிர் தரப்பாக இருந்தாலும் இதைத்தான் செய்வீர்கள் என்று பதில் அளித்த நீதிபதிகள், சாத்தான்குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் வழக்கை யாரும் மறந்திட முடியாது என்று கூறினர்.
இனி இதுபோன்ற ஒரு நிகழ்வு
பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் தாய் கொடுத்த புகாரில் கூட இன்னும் வழக்கு பதியப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். உயர் அதிகாரிகள் முதற்கொண்டு இதில் தொடர்புடைய யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
காவல்துறை தான் மக்களுக்கு பாதுகாப்பு, அந்த காவல்துறையே இப்படி செய்யலாமா?.. இனி இது போன்று போலீசார் யாரும் நடக்கக் கூடாது.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் 8 ஆம் தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக சிபிஐக்கு வழக்கை மாற்றம் செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications