இதுதான் சரியான வழி.. சீனாவிற்கு தக்க பாடம் புகட்டுவது எப்படி.. ஒன்இந்தியா வாசகர்கள் அசத்தல் ஐடியா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவை தொடர்ந்து சீண்டி வரும் சீனாவிற்கு தக்க பாடம் கற்பிப்பது எப்படி என்று ஒன்இந்தியா வாசகர்கள் அசத்தலான ஐடியாக்களை கொடுத்து இருக்கிறார்கள்.

இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் கடும் மோதல் நிலவி வருகிறது. எல்லையில் நடக்கும் இந்த சண்டையில் அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. தொடர் பேச்சுவார்த்தைகளில் எல்லாம் சீனா தொடர்ந்து திமிராக அமைதிக்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்தநிலையில் சீனாவுக்கு எப்படி பாடம் புகட்டலாம்.. என்ன செய்தால் சீனா வழிக்கு வரும் என்று ஒன்இந்தியா வாசகர்களிடம் கருத்து கேட்டு இருந்தோம். இதற்கு வாசகர்கள் எக்கச்சக்கமான ஐடியாக்களை அனுப்பி இருந்தனர். பல ஐடியாக்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. அது என்ன மாதிரியான திட்டங்கள், அறிவுரைகள் என்று இங்கு பார்க்கலாம்.

ஆதரவு நாடுகளைத் திரட்டலாம்

ஆதரவு நாடுகளைத் திரட்டலாம்

ஒன்இந்தியா வாசகர் செல்வகணபதி தெரிவித்துள்ள ஐடியாவின் படி, சீனாவை ஒடுக்க சீனா அத்துமீறி கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் திபெத்தில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். ஐநாவின் உதவியோடு இதை செய்ய வேண்டும். அதேபோல் சீனா ஆக்கிரமித்து இருக்கும் ஹாங்காங், மற்றும் வியட்நாம் பகுதிகளிலும் இதேபோல் செய்ய வேண்டும். இன்னொரு பக்கம் சீனா தென் சீன கடல் எல்லையில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளை ராஜாங்க ரீதியாக நமக்கு ஆதரவாக மாற்ற வேண்டும்.

பொருள் புறக்கணிப்பு செய்யலாம்

பொருள் புறக்கணிப்பு செய்யலாம்

அதேபோல் சீனாவிற்கு எதிராக மோதலில் இருக்கும் ஜப்பான், அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளை சீனாவிற்கு எதிராக திருப்ப வேண்டும், என்று கூறியுள்ளார்.இன்னொரு வாசகர் கோபாலகிருஷ்னன் சீனாவின் பொருட்களை மொத்தமாக புறக்கணிக்க வேண்டும். சீனாவின் பொருட்களை இறக்குமதி செய்ய கூடாது. சீனாவின் செயலிகளை பயன்படுத்த கூடாது. சீனாவிற்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கலாம். இதனால் அவர்கள் பொருளாதாரம் பாதிக்கும். சீனாவிற்கு நம்நாட்டு இளைஞர்கள் படிக்க செல்ல கூடாது, என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்போம்

உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்போம்

வாசகர் சை.புருஷோத்தமன் கொடுத்துள்ள ஐடியாவில், சீனாவின் பொருளாதாரம் இந்தியாவையே நம்பி உள்ளது. எனவே நாம் இனி இந்திய உற்பத்தி பொருட்களை பயன்படுத்த வேண்டும். முதலில் உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வேண்டும். சிறு குறு தொழில்களுக்கு அதிக வங்கி கடன் வழங்க வேண்டும். போதிய அளவு மக்கள் கடினமாக உழைக்க வேண்டும். உற்பத்தியை அதிகபடுத்திகொண்டு சீனா இறக்குமதியை படி படியாக குறைக்க வேண்டும்.

உளவியல் உத்தி

உளவியல் உத்தி

உளவியல் போர் தொடுப்பதே சீனாவின் வேலையாகும். அவர்களையும் நாம் உளவியல் மூலமாகவே எதிர்கொள்ள வேண்டும். அதாவது இந்திய எல்லையில் இந்தியாவும் படை பலத்தை அதிக படுத்தி பின்பு தான் பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். இவ்வாறு செய்தால் சீனா இனி இந்தியாவிடம் வால் ஆட்டாது என்று கூறியுள்ளார். அதேபோல் வாசகர் எஸ். முத்துக்குமரன் இதேபோல் சீனாவின் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று கூறியுள்ளார்.

தொழில் வளர்ச்சி

தொழில் வளர்ச்சி

இன்னொரு வாசகர் வைதீசன் எம் தெரிவிக்கையில், எல்லோரும் நினைப்பார்கள் சீனா நமக்கு ஏற்றுமதி பண்ணும் சில பொருட்களை தடை செய்தால் அவர்கள் வழிக்கு வருவார்கள் என்று. அது மட்டும் இல்லாமல், அவர்கள் ஏற்றுமதி செய்யும் சில உயர் தொழில்நுட்ப தயாரிப்புகள் மேம்பாடு பொருட்களை நாம் உலக அளவில் export செய்ய ஆரம்பித்து அப்படியே அவர்களின் மார்க்கெட்டை பிடித்தால் போதும். இதற்கு சில காலம் கூட ஆகலாம். செய்தால் அவர்களின் அடி வயிற்றில் அடித்தது போல் இருக்கும். மற்றும் Infrastructure development செய்தாலே போதும். மற்ற நாடுகள் இங்கே தொழில் தொடங்க அதிகம் முன்வருவார்கள். இதுவும் இன்னும் அவர்களின் உலக மார்க்கெட்டை பிடிக்க உதவும், என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+