கர்நாடகாவில் சோழர் கால கோவிலையே காணோம்.. அமைச்சர் சேகர்பாபுவுக்கு, பொன் மாணிக்கவேல் பரபர கடிதம்
சென்னை: கர்நாடகத்தின் தும்கூர் மாவட்டத்தில் சோழர்கால கோவில் மாயமாகி உள்ளது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்தவர் பொன் மாணிக்கவேல். இவர் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சிலைகளை மீட்டு கொண்டு வந்தார்.
அதன்பிறகு அவர் சிலை கடத்தல் புலானாய்வு பிரிவின் சிறப்பு அதிகாரியாக உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். இந்த வேளையிலும் தமிழக கோவில்களில் சிலை, கலை பொருட்கள் திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரித்தார்.

சேகர்பாபுவுக்கு கடிதம்
இந்நிலையில் தான் பொன் மாணிக்கவேல், தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கர்நாடகத்தில் உள்ள பழமையாகன சோழர் கால கோவில் பற்றிய விபரங்கள் உள்ளன. கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் 949 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சோழர்கால கோவில், சிலைகள் மாயமாகி உள்ளதாக கடிதத்தில் கூறியுள்ளார்.

சோழ மன்னர்கள்
முதலாம் ராஜராஜ சோழனின் பேரனும், முதலாம் ராஜேந்திர சோழனின் மகனுமானவர் தான் முதலாம் ஸ்ரீஉடையார் ராஜாதி ராஜ தேவர். இவர் தனது தந்தையான முதலாம் ராஜேந்திர சோழன் நினைவாக ராஜேந்திர சோழபுரம் என்ற நகரை தும்கூர் மாவட்டம் குனிகல் அருகே நிறுவினர். இந்த நகரம் குனிகலில் இருந்து 5 கிலோமீட்டர் தெலைவில் உள்ளது.

தந்தை நினைவாக கோவில்
மேலும் கோதேகிரி கிராமத்தில் தனது தந்தையின் நினைவாக 949 ஆண்டுகளுக்கு முன்பு 'ராஜேந்திர சோழீஸ்வரம்' என்ற பெயரில் கோயிலைக் கட்டினார். இங்கு வெண்கல சிலை மற்றும் கல்லில் செதுக்கப்பட்ட சிலைகள் இருந்தன. தற்போதைய தகவலின்படி இந்த கிராமத்தில் பழமையான கோவில் இல்லை. கோவில் கல்வெட்டு புறம்தள்ளப்பட்டுள்ளது.
Recommended Video

சிலைகள்
கோவிலில் இருந்த வெண்கல சிலை, கற்சிலைகள் திருடப்பட்டுள்ளது. தமிழக அதிகாரிகள் கல்வெட்டுகளை மீட்டு, காணாமல் போன கோவில் மற்றும் சிலைகள் குறித்து சம்பந்தப்பட்ட போலீசில் புகார் அளிக்க வேண்டும். மேலும் கோவில் இருந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என கடிதத்தில் கூறியுள்ளார்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications