Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலரா ஏன் ஆபத்தானது? முக்கிய அறிகுறிகள் என்ன? சிகிச்சை முறை என்னென்ன!முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழைக் காலத்தில் காலரா பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், அதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பார்க்கலாம்.

Recommended Video

    காரைக்காலில் காலராவால் பாதிப்படைந்தவர்களை சந்தித்து பேசிய எல் முருகன் - வீடியோ

    கொரோனா பாதிப்பே பெரும் போராட்டத்திற்குப் பின்னர், இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையே பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், பல இடங்களில் காலரா பரவ தொடங்கி உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, காலரா பாதிப்பு காரணமாக நேபாளத்தில் பானி பூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. மழைக் காலத்தில் தமிழகத்திலும் காலரா பாதிப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளது.

    காரைக்கால்

    காரைக்கால்

    காரைக்கால் பகுதியில் காலரா பரவல் காரணமாக பொதுச் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு சுமார் 700 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், பலருக்குக் காலரா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொதிக்க வைத்த தண்ணீர் அல்லது ஆரோ நீரைக் குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், பேக்கரிகளிலும் கொதிக்க வைக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    காலரா

    காலரா

    காலரா என்பது ஒரு பாக்டீரியா நோயாகும். இது பொதுவாக அசுத்தமான நீரில் எளிதாகப் பரவும். இப்போது பின்பற்றப்படும், நவீன கழிவுநீர் மேலாண்மை மற்றும் நீர் சுத்திகரிப்பு போன்ற அமைப்புகளால் காலரா பெரியளவில் குறைந்துள்ளது. போதுமான சுகாதாரம் இல்லாமல் நெரிசலான சூழ்நிலையில் பொதுமக்கள் வாழும் போது, காலரா பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.

     14 நாட்கள்

    14 நாட்கள்

    காலரா பாக்டீரியா நமது உடலில் ஏழு முதல் 14 நாட்கள் வரை இருக்கும். அந்தச் சமயத்தில் மற்றவர்களுக்கும் அது எளிதாகப் பரவக் கூடும். பெரும்பாலான காலரா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கே முக்கிய அறிகுறியாக உள்ளது. குமட்டல் மற்றும் வாந்தியும் ஏற்படும். காலரா ஆரம்பக் கட்டத்தில் ஏற்படும் வாந்தி சில மணி நேரம் வரை இருக்கும்.

     நீரிழப்பு

    நீரிழப்பு

    மற்றொரு முக்கிய அறிகுறி நீரிழப்பு ஆகும். உடல் எடையில் 10% அல்லது அதற்கு மேலும் கூட நீரிழப்பு ஏற்படலாம். எரிச்சல், சோர்வு, குழி விழுந்த கண்கள், வாய் வறட்சி, அதிக தாகம், வறண்ட மற்றும் சுருங்கிய தோல் ஆகியவை காலரா நீரிழப்புக்கான அறிகுறிகளாகும். மேலும், இதயத் துடிப்பு அதிகரிப்பது. றைந்த இரத்த அழுத்தம் ஆகிய அறிகுறிகளும் சிலருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

     சிகிச்சை முறை

    சிகிச்சை முறை

    காலரா என்பது எளிதில் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயாகும். ORS கரைசல் நீரை அளித்து சிகிச்சை அளிக்க வேண்டும். சராசரியாக முதல் நாளில் 6 லிட்டர் வரை ORS தேவைப்படலாம். கடுமையான நீரிழப்பு ஏற்பட்டவர்களுக்கு விரைவாகச் சிகிச்சை அளிக்க வேண்டும். உரிய நேரத்தில் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால், ஆரோக்கியமான நபர்களுக்குக் கூட உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

     முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். குறிப்பாகக் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும் உணவைக் கையாளும் முன்பும் சோப்பு போட்டு 15 விநாடிகளுக்குக் கழுவ வேண்டும். அல்லது சான்டிசைர் மூலம் கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். பாதுகாப்பான கொதிக்க வைக்கப்பட்ட அல்லது ஆரோ நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பல் துலக்குவதற்குக் கூட சுத்திகரிக்கப்பட்ட நீரையே பயன்படுத்துங்கள்.

     தவிருங்கள்

    தவிருங்கள்

    முழுமையாகச் சமைத்த மற்றும் சூடாக இருக்கும் உணவை மட்டுமே உண்ண வேண்டும். பாதி சமைக்கப்பட்ட உணவு, குளிர்ந்த நிலையில் இருக்கும் உணவுகளை உண்ண வேண்டாம். சாலையோர உணவுகளை முடிந்த வரை தவிர்க்கவும். கொதிக்க வைத்த நீரைத் தவிர மற்ற நீரை அருந்த வேண்டாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+