"வைரமுத்து" கிட்ட ஸ்டாலின்.. அந்த "பாடகியம்மா" கத்திட்டே இருக்காங்களே, நியாயமா? கேட்பது யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கவிஞர் வைரமுத்துவை சீண்டி, தமிழக பாஜக தலைவர் தந்துள்ள பேட்டியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. என்ன நடந்தது?

டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகாட் ஆகியோர் பாஜக எம்பி மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங், பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லி, கடந்த பல வாரங்களாகவே போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்..

Cinema: Vairamuthu 19 sexual harassment complaint, says tn bjp leader annamalai

ஆதரவுகள்: இந்த போராட்டத்தின்போது, பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கொண்டிருக்கிறார்கள்.. விளையாட்டு வீரர்களின் இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தந்துள்ளன.. அதேபோல நம்முடைய தமிழக முதல்வர் ஸ்டாலினும், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அத்துடன், டெல்லி போலீசுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்... அதைவிட முக்கியமாக, "செங்கோல் வளைந்து விட்டது" என்றும் காட்டமாக பதிவிட்டிருந்தார்.

மேலிட பாஜகவுக்கு இந்த விவகாரம் பெரும் சங்கடமாக மாறி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், கவியரசர் வைரமுத்துவை சீண்டி தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

நக்கீரன்: "நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்லக்கூடிய தமிழ்மண்ணில் நாம் பிறந்திருக்கிறோம்.. குற்றம் குற்றமே என்று நக்கீரர் எதை சொல்றாரு? அதாவது எல்லா குற்றத்துக்கும் ஒரு ஆதாரம் வேண்டும்.. குற்றத்தை முறைப்படி விசாரிக்க ஒரு புரொசிஜர் வேண்டும்..

புகார் சொன்ன மல்யுத்த வீராங்கனைகள் எந்த ஆதாரங்களையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை... ஆனால், புகார் அளித்தவுடன் எப்ஐஆர் போட்டாச்சு.. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. ஆனால், உடனே கைது செய்ய செய்தால்தான், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை நடத்துவோம் என்று சொல்வது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது..

Cinema: Vairamuthu 19 sexual harassment complaint, says tn bjp leader annamalai

புகார்கள்: தமிழக முதல்வர் ஸ்டாலின் செங்கோல் வளைந்து விட்டது என்று சொல்கிறார்.. ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான நபராக திகழும் கவிப்பேரரசு வைரமுத்து மீதே, மொத்தம் 19 பாலியல் கம்ப்ளைண்ட்கள் இருக்கின்றன.. அவருக்கு லெப்ட்டில், ரைட்டில் நின்று கொண்டிருப்பது யார்? கவிதையெல்லாம் பயங்கரமா எழுதுறாரே.. யார் கூட அவர் நிற்கிறார்? முதல்வர் முக ஸ்டாலின்கூட நிற்கிறார்.

அந்த பாடகியம்மா எத்தனை வருஷமா கத்திட்டு இருக்காங்க.. அதுவும் பாலியல் விவகாரத்தில்.. இதுவரைக்கும் தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையே.. அட்லீஸ்ட் அவர் மீது எப்ஐஆராவது பதிவு செய்தாங்களா? போலீஸ் ஸ்டேஷன் கூப்பிட்டு விசாரணையாவது செய்தாங்களா? நான் வைரமுத்துவை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. அப்படி சொன்னால் அது தவறு.. ஏன் என்றால், குற்றத்துக்காக யாரையும் கைது செய்ய முடியாது.. போலீஸ் விசாரித்து ரிப்போர்ட் தரணும்..

புகார்: அதனால், புகார் அளித்தவுடன் எப்ஐஆர் போட்டாச்சு.. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. ஆனால், உடனே கைது செய்ய செய்தால்தான், அடுத்தக்கட்ட நகர்வுக்கு போவோம் என்று வீரர்கள் சொல்வது ரொம்ப தவறு" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+