கல்பாக்கத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிஎஸ்ஐஎப் வீரர் பலி.. இரவு பணியில் இருந்தவருக்கு சோகம்
சென்னை: சென்னை அருகே கல்பாக்கம் அணுமின் நியைத்தில் சிஐஎஸ்எஃப் எனும் மத்திய தொழில் பாதுகாப்ப படை வீரர் வைத்திருந்த துப்பாக்கி தானாக சுட்டதில் அவரது உடலில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் கல்பாக்கம் அணுஉலை செயல்பட்டு வருகிறது. இந்த அணுஉலை என்பது செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆபத்து நிறைந்த இடம் என்பதால் கல்பாக்கம் அணு உலையின் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் கல்பாக்கம் அணுஉலையில் நேற்று பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ரவி கிரண் ஈடுபட்டு இருந்தார். இன்று காலையில் அவருக்கு பணி முடிவடைந்தது. இதையடுத்து அவர் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு திடீரென்று சுட்டது.
இதில் கண்இமைக்கும் நேரத்தில் துப்பாக்கியில் இருந்து வெளியே வந்த தோட்டா ரவி கிரணின் உடலில் பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் ரவி கிரண் மீட்கப்பட்டு பஸ்சில் கல்பாக்கம் அணுசக்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தற்போது அவரது உடல் கல்பாக்கம் அணுசக்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications