ஊதிய ஒப்பந்தகாலம் 4 ஆண்டுகளாக மாற்றம்: கண்டனம் தெரிவித்து சிஐடியு தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த காலம் 4 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்க ஊழியர்கள் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை குரோம்பேட்டையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தமிழக அரசு அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஊதிய உயர்வாக ரூ.1,000
அப்போது அவர் கூறுகையில், ''தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவுப்படி, 14-வது ஊதிய ஒப்பந்த 7-ம் கட்ட பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, சில கோரிக்கைகள் முடிவு செய்யப்பட்டு ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதிய உயர்வாக ரூபாய் 1,000 வழங்கப்படும். பணியாளர்களுக்கான படிகளும் தொழிற்சங்கங்களின் கோரிக்கையின்படி உயர்த்தப்பட்டுள்ளது.

5 லட்சம் ரூபாயாக
அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் ஒரே வழிகாட்டுதலுக்கான நிலையாணையை நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளது. குடும்ப நல நிதி 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதேபோல் கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியமாக ரூ.300 வழங்கப்பட உள்ளது. மேலும் ஊழியர்களுக்கான சீருடைக்கு தையல் கூலி உயர்த்தி வழங்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்
இதற்கு பின்னர் சி.ஐ.டி.யு. தலைவரான சவுந்தரராஜன் கூறுகையில், ''தாங்கள் கொடுத்த பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சில கோரிக்கைகளே நிறைவேற்றப்பட்டுள்ளன.ஊதிய உயர்வு குறித்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இதற்கான ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திடவில்லை. மேலும் தமிழக அரசை கண்டித்து இதற்காக நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்'' என்று கூறினார்.

ஆர்ப்பாட்டம்
இதேபோல் அண்ணா தொழிற்சங்கம் தலைவர் கமலக்கண்ணன் கூறுகையில், ''நாங்கள் கொடுத்திருந்த எந்த கோரிக்கையும் இதில் நிறைவேற்ற வில்லை. எனவே நாங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை" என்றார். இந்த நிலையில், நேற்று கூறியபடி, போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த காலம் 4 ஆண்டுகளாக மாற்றியதை கண்டித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்க ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வடபழனியில் உள்ள பேருந்து டிப்போவில், ஊதிய ஒப்பந்த காலம் 4 ஆண்டுகளாக மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருகிறார்கள்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications