காலநிலை மாற்றத்தால் 29 மாவட்டங்கள் பாதிப்பு! வேளாண் பட்ஜெட்டில் எச்சரிக்கை
சென்னை: காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் 29 மாவட்டங்கள் பாதிக்கப்படலாம். இந்த மாவட்டங்களில் வேளாண்மை பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறினார்.
Recommended Video
தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் காலநிலை மாற்றத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. புவியியல் இருப்பிடம் அடிப்படையில் தமிழகத்தில் 29 மாவட்டங்கள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படலாம் என 6வது காலநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் வேளாண்மையும் பாதிக்கலாம். இதை குறைப்பது அவசியம். இதனால் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப பயிர்கள் சாகுபடி முறை ஊக்குவிக்கப்படுகிறது. இதற்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications