எம்ஜிஆர் பாணியில் எடப்பாடி பழனிச்சாமி - களை பறித்த விவசாயி பெண்களுடன் கலந்துரையாடல்

திருவாரூர் கோவில்வெண்ணி பகுதியில் வயல்வெளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயிகளுடன் முதல்வர் பழனிசாமி உரையாடினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகராக இருந்து புரட்சித்தலைவராக உயர்ந்து அதிமுகவை தொடங்கி முதல்வராக மூன்று முறை வெற்றி பெற்ற எம்ஜிஆர் மக்களிடம் நேரடியாக பழகுவார். அவர் போகும் பாதையில் விவசாயிகள் வேலை செய்து கொண்டிருந்தால் காரை நிறுத்தி பேசுவார். நெல் நாற்றுக்களை தொட்டுக்கொடுப்பார். அதே பாணியை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பின்பற்றி வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்டம் மாவட்டமாக சுற்றி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நேற்று திருவாரூரில் சுற்றுப்பயணம் செய்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆய்வுக்கூட்டம் நடத்தினார். நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

CM Eadapadi Palanisamy following MGR style A relaxing talk with the farmers

திருவாரூரில் வேலையை முடித்துக்கொண்டு பிற்பகலில் தஞ்சாவூர் கிளம்பினார் முதல்வர் பழனிச்சாமி. திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் கோயில் வெண்ணி அருகே ஆதனூர் கிராமத்தில் சாலையோர நெல் வயலில், களை பறித்துக்கொண்டிருந்த விவசாய பெண்களிடம் நடைபெறும் விவசாய பணிகள் குறித்து கலந்துரையாடினார். முக கவசங்களும் வழங்கினார் முதல்வர் பழனிச்சாமி.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் பழனிச்சாமி. திருவாரூர் - கோவில்வெண்ணி அருகே ஆதனூர் கிராமத்தில் களை எடுக்கும் பெண்களிடம் சற்று உரையாடி, நிறை குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு முகக்கவசம் வழங்கினேன் என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+