ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடியார் திடீர் சந்திப்பு.. தமிழக அரசியலில் பரபரப்பு!
சென்னை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்நிலையில் ஆளுநரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேசலாம் எனகூறப்படுகிறது. அதேபோல் தமிழக டிஜிபி நியமனம், தமிழக தலைமைச் செயலாளர் நியமனம் குறித்தும் பேசலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக விவாதிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோரும் ஆளுநரை சந்தித்துள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து விட்டு திரும்பிய நிலையில் முதல்வர் ஆளுநரை சந்தித்து இருப்பது தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications