"பதுங்கினால்.. பாய்வோம்".. மாஜியை சுட்டிக்காட்டி.. சட்டசபையில் கண்டிப்புடன் பேசிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தவறு செய்துவிட்டு பதுங்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாய்ந்து நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
Recommended Video
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் இன்று பேசினார். அரசின் சாதனைகளையும், நோக்கங்களையும் எடுத்துரைத்த ஆளுநரின் உரைக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். அண்ணாவின் கூற்றுப்படி ஆளுநர் உரை மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதில் எதிர்கட்சித் தலைவர்கள் மீது எடுக்கப்படும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் கண்டிப்புடன் பேசினார். தவறு செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஸ்டாலின் உரை
முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், நாங்கள் வாக்குறுதிகளை வேகமாக நிறைவேற்றி வருகிறோம். நாங்கள் கொடுத்த பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம். மீதி வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம். கடந்த ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்த 75% திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. மக்களிடையே திமுக அரசு மீது அவ நம்பிக்கை ஏற்படவில்லை. இந்த அரசை மக்கள் நம்புகிறார்கள்.

வாக்குறுதிகள்
நாங்கள் மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம். இந்த உண்மையுடன்தான் நான் வாழ்நாள் முழுக்க செயல்படுவேன். தற்போது சட்டத்தின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்த ஸ்டாலின் உறுதியாக நடவடிக்கை எடுப்பான். அரசின் நடவடிக்கைக்கு பயந்து நடுங்கும் நபர்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தர மாட்டோம்.

தவறு செய்தால் தண்டனை
நாங்கள் மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம். இந்த உண்மையுடன்தான் நான் வாழ்நாள் முழுக்க செயல்படுவேன். தற்போது சட்டத்தின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்த ஸ்டாலின் உறுதியாக நடவடிக்கை எடுப்பான். அரசின் நடவடிக்கைக்கு பயந்து நடுக்கும் நபர்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தர மாட்டோம்.

பயம் இருந்தால் நடவடிக்கை
இந்த வழக்கு பாயுமோ என்று பயந்து நடுங்குகிறவர்களுக்கு திமுகவின் இந்த அரசு எந்த காலத்திலும் பாதுகாப்பு வழங்காது. தவறு செய்யாதவர்கள் கவலைப்பட வேண்டியது கிடையாது. காவல்துறையை ஏவல்துறையாக மாற்றிவிட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார். நாங்கள் மாற்றினோமா அல்லது தூத்துக்குடியில் 13 பேரை கொன்ற போது நீங்கள் காவல்துறையை ஏவல்துறையாக மாற்றினீர்களா?

பாய்ந்து நடவடிக்கை
பதுங்கும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். தவறு செய்யும் நபர்கள் மீது நாங்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். பதுங்கும் நபர்கள் யாராக இருந்தால் அச்சமின்றி இந்த அரசு பாய்ந்து பிடிக்கும். அப்படி பதுங்கிய ஒருவரும் கடந்த 5ஆம் தேதி கைது செய்யப்பட்டுவிட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள், என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications