Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பதுங்கினால்.. பாய்வோம்".. மாஜியை சுட்டிக்காட்டி.. சட்டசபையில் கண்டிப்புடன் பேசிய முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவறு செய்துவிட்டு பதுங்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாய்ந்து நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

Recommended Video

    இன்றைய(07-01-2022) தமிழ்நாடு சட்டமன்ற சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் உரை - வீடியோ

    தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் இன்று பேசினார். அரசின் சாதனைகளையும், நோக்கங்களையும் எடுத்துரைத்த ஆளுநரின் உரைக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். அண்ணாவின் கூற்றுப்படி ஆளுநர் உரை மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.

    இதில் எதிர்கட்சித் தலைவர்கள் மீது எடுக்கப்படும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் கண்டிப்புடன் பேசினார். தவறு செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.

    ஸ்டாலின் உரை

    ஸ்டாலின் உரை

    முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், நாங்கள் வாக்குறுதிகளை வேகமாக நிறைவேற்றி வருகிறோம். நாங்கள் கொடுத்த பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம். மீதி வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம். கடந்த ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்த 75% திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. மக்களிடையே திமுக அரசு மீது அவ நம்பிக்கை ஏற்படவில்லை. இந்த அரசை மக்கள் நம்புகிறார்கள்.

    வாக்குறுதிகள்

    வாக்குறுதிகள்

    நாங்கள் மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம். இந்த உண்மையுடன்தான் நான் வாழ்நாள் முழுக்க செயல்படுவேன். தற்போது சட்டத்தின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்த ஸ்டாலின் உறுதியாக நடவடிக்கை எடுப்பான். அரசின் நடவடிக்கைக்கு பயந்து நடுங்கும் நபர்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தர மாட்டோம்.

    தவறு செய்தால் தண்டனை

    தவறு செய்தால் தண்டனை

    நாங்கள் மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம். இந்த உண்மையுடன்தான் நான் வாழ்நாள் முழுக்க செயல்படுவேன். தற்போது சட்டத்தின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்த ஸ்டாலின் உறுதியாக நடவடிக்கை எடுப்பான். அரசின் நடவடிக்கைக்கு பயந்து நடுக்கும் நபர்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தர மாட்டோம்.

    பயம் இருந்தால் நடவடிக்கை

    பயம் இருந்தால் நடவடிக்கை

    இந்த வழக்கு பாயுமோ என்று பயந்து நடுங்குகிறவர்களுக்கு திமுகவின் இந்த அரசு எந்த காலத்திலும் பாதுகாப்பு வழங்காது. தவறு செய்யாதவர்கள் கவலைப்பட வேண்டியது கிடையாது. காவல்துறையை ஏவல்துறையாக மாற்றிவிட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார். நாங்கள் மாற்றினோமா அல்லது தூத்துக்குடியில் 13 பேரை கொன்ற போது நீங்கள் காவல்துறையை ஏவல்துறையாக மாற்றினீர்களா?

    பாய்ந்து நடவடிக்கை

    பாய்ந்து நடவடிக்கை

    பதுங்கும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். தவறு செய்யும் நபர்கள் மீது நாங்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். பதுங்கும் நபர்கள் யாராக இருந்தால் அச்சமின்றி இந்த அரசு பாய்ந்து பிடிக்கும். அப்படி பதுங்கிய ஒருவரும் கடந்த 5ஆம் தேதி கைது செய்யப்பட்டுவிட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள், என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+