கவனிச்சீங்களா? “திராவிடம், ஒன்றிய அரசு, அண்ணா, கலைஞர்” - மோடி, ஆளுநர் முன் அழுத்தி சொன்ன ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு எழுதிக் கொடுத்த அறிமுக உரையில் இடம்பெற்று இருந்த தமிழ்நாடு, திராவிட மாடல், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட வார்த்தைகளை படிக்காமல் தவறவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோரை மேடையில் வைத்துக்கொண்டே பல முறை அந்த வார்த்தைகளை பயன்படுத்தினார்.
சென்னை பல்லாவரத்தில் பிரதமர் மோடி, ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் தொடக்கத்திலேயே அண்ணா பெயரையே உச்சரித்தார். "தமிழ்நாட்டின் தலைமகனான பேரறிஞர் அண்ணா பெயரிலான பன்னாட்டு விமான நிலையத்தில், 1,260 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம், சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை, திருத்துறைப் பூண்டி அகஸ்தியம்பள்ளி ரயில் சேவை எனத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான சில முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைக்க வருகை தந்திருக்கிறார் நமது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்." என்று குறிப்பிட்டார்.

திராவிட மாடல்: அதேபோல், "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு திராவிட மாடல் அரசும் முனைப்போடு முயன்று வருகிறது." என்று திராவிட மாடலை சுட்டிக்காட்டினார். "நமது மாநிலப் பொருளாதாரத்தின் இரத்த நாளங்களாக விளங்கும், சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒன்றிய அரசின் முயற்சிகளுக்கு, தமிழ்நாடு அரசு தன்னுடைய முழு ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும்!" என்று பல முறை தனது உரையில் ஒன்றிய அரசு என்றே முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.
"தமிழ்நாட்டில் இயங்கி வரும் 'திராவிட மாடல்' அரசானது, எத்தனையோ சமூக வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சமூகவளர்ச்சித் திட்டங்களோடு உட்கட்டமைப்புகளையும் சீர்செய்து வருகிறது. அனைத்துத் துறை வளர்ச்சியின் நோக்கம் கொண்ட அரசாக இருப்பதால், அனைத்துத் துறைக்கும் சமமான அளவில் நிதிகளை ஒதுக்கி திட்டங்களைத் தீட்டி வருகிறோம். அதற்கு துணைபுரிவதாக ஒன்றிய அரசினுடைய திட்டங்கள் அமைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்று திராவிட மாடல் அரசு என அவர் மீண்டும் தனது உரையில் குறிப்பிட்டார்.

அண்ணா, கருணாநிதி பெயர்கள்: அதேபோல், "ஒன்றியத்தில் உண்மையான கூட்டாட்சி இருக்க வேண்டுமானால், மாநிலங்கள் சுயாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களும் வலியுறுத்தி வந்தார்கள். ஒரு மண்டபத்தின் மேல்பகுதியில் அனைத்து பளுவையும் வைத்துவிட்டு, பலமற்ற தூண்களை மண்டபத்தை தாங்குவதற்காக அமைப்பது கேலிக்குரியது அல்லவா என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கேட்டார்கள்." என்று பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரது பெயர்களை மேற்கோள் காட்டினார்.

மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசு: "மக்களுக்கு நெருக்கமானவை மாநிலங்களாக இருப்பதால் மக்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை மாநிலங்களுக்கே அதிகம் இருக்கிறது. எனவே, மாநிலங்களின் நிதித் தேவைகளையும் மாநில மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் திட்டங்களை நிறைவேற்றவும் ஒன்றிய அரசினுடைய ஒத்துழைப்பு மிகமிகத் தேவை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களும் ஒரு மாநிலத்தினுடைய முதலமைச்சராக இருந்தவர் என்பதால் எனது கோரிக்கையின் உள்ளீட்டை அவரும் உணர்வார் என்று நான் கருதுகிறேன்." என மாநில சுயாட்சி பற்றி பேசியதுடன் ஒன்றிய அரசு என்றே மீண்டும் மீண்டும் முதலமைச்சர் குறிப்பிட்டு இருந்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications