ஆக்ஷனில் இறங்கிய முதல்வர்.. ஸ்மார்ட் சிட்டியில் வேலுமணி கமிஷன்.. நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேட்டில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்
சென்னை: "ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேட்டில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
தி.நகர் பகுதி முழுக்க முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.. எப்போது மழை வந்தாலும் இதே பிரச்சனையைதான் அந்த பகுதி மக்கள் சந்திக்கிறார்கள்.
இதற்கு காரணம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அடிப்படை கட்டமைப்பான, மழைநீரை வெளியேற்ற சரிவர வசதி செய்யாததே தி.நகர் நீரில் மிதக்க காரணம் என்கிறார்கள்..

வர்த்தக பகுதி
தி.நகர் ஒரு வர்த்தக பகுதி என்பதால், அங்குள்ள கடைகளை சுற்றிலும் நீர் தளும்பி நிற்கிறது.. இதனால் கடையை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது.. இந்த 3 நாட்களாகவே கனமழை பெய்து வருவதால், திநகரின் பல பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது... பைக்கில் சென்றாலும், அந்த பைக்கின் உள்ளேயும் மழைநீர் சென்று மோட்டார் ரிப்பேர் ஆகிவிடுகிறது.

அதிமுக
இவ்வளவுக்கும் காரணம் ஸ்மார்ட்டி சிட்டி திட்டம்தான், அந்த "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்த அதிமுக அரசுதான் என்ற குற்றச்சாட்டுகள் வெடித்து கிளம்பி உள்ளன. பாண்டிபஜார் பகுதியில் ரூ.39.86 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய திறன்மிகு பிளாட்பாரம், சாலைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், முதியோர்கள் உட்கார கூடிய இருக்கைகள் அமைக்கப்பட்டன..

கொந்தளிப்பு
இந்த திட்டத்தை துவங்கும்போதே மக்கள் கொந்தளித்தனர்.. நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் இதெல்லாம் தேவையா? என்று ஆதங்கத்துடன் கேட்டனர்... இப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டம் அழகு தந்ததே தவிர பயன் தரவில்லை.. இதற்கு பதிலாக, பாண்டிபஜாரில் மழைநீர் வடிய வடிகால் வசதியை செய்திருந்தால் நன்றாகவே இருக்குமே என்றும் கூறப்பட்டன. இப்போது இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினால், கடும் துயரத்தையும், சிக்கலையும் சந்தித்து வருவதாக தி.நகர் மக்களும், வாகன ஓட்டிகளும் புலம்பி வருகிறார்கள்.

கோரிக்கை
எனவே, தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பின்னரே மழைநீர் தேங்கும் சூழல் உள்ளது என மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.. இந்நிலையில்தான், முதல்வர் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. 3வது நாளாக சென்னையின் பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வுசெய்து வருகிறார் ஸ்டாலின்.. இன்று கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வரிடம், செய்தியாளர்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து கேள்வி எழுப்பினர்.

வேலுமணி
அதற்கு முதல்வர் ஸ்டாலின், ''தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்... ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெற்றுள்ளனர்.. பலகோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது..முறையாக எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசிடமிருந்து திட்டத்திற்காக நிதி பெறும் பணிகள் நடைபெறவில்லை. எஸ்பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சித் துறை என்ன செய்தது என்பது பற்றியும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications