Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டின் அடுத்த DGP யார்? டெல்லிக்கு பறக்கும் லிஸ்ட்! ஸ்டாலின் குட் புக்கில் உள்ள அந்த அதிகாரி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த காவல்துறைத் தலைவர் (டிஜிபி) தேர்வு குறித்த பட்டியல் விரைவில் டெல்லிக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டிஜிபியைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் டெல்லியில் நடைபெற வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய முடிவை எடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற பிறகு, அவரைத் தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத் தலைவராக நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் சங்கர் ஜிவாலின் பணி ஓய்வு உறுதியாகியுள்ளது. அவருக்குப் பணி நீட்டிப்பு இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது.

DGP

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?

டிஜிபி சங்கர் ஜிவால், 1990ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த உத்தரகாண்ட் மாநில ஐபிஎஸ் அதிகாரி. இவர் முதுகலைப் பொறியியல் பட்டதாரி. சாய்ல் (SAIL) மற்றும் பிஇஎல் (BEL) போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பொறியாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தமிழகத்தில் சேலம், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர், திருச்சி காவல் ஆணையர், உளவுப் பிரிவு டிஐஜி/ஐஜி, சிறப்பு அதிரடிப் படை ஏடிஜிபி போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, சங்கர் ஜிவால் பணி நீட்டிப்பை எதிர்பார்த்த நிலையில், புதிய டிஜிபியை நியமிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. புதிய டிஜிபியைத் தேர்வு செய்யும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே தொடங்கிவிட்டார்.

தமிழ்நாட்டின் டிஜிபி: லிஸ்டில் உள்ள அதிகாரிகள்

தமிழ்நாடு அரசின் பரிந்துரைப் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்யும். இதில், தமிழக உள்துறை அதிகாரிகள் மற்றும் தற்போதைய டிஜிபி ஆகியோருடன் டெல்லியில் கலந்தாலோசிக்கப்பட்டு, தகுதியானவர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு மீண்டும் முதல்வருக்கு அனுப்பப்படும். இந்தப் பட்டியலில் இருந்து அவர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பார்.

சென்னை மற்றும் டெல்லியில் விரிவான ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன. இதில், சங்கர் ஜிவால் சில பெயர்களைப் பரிந்துரைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடக்கத்தில், அபய்குமார் சிங், வன்னி பெருமாள், சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ் குமார், சீமா அகர்வால், வினித் தேவ் வான்கடே, மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன் ஆகிய எட்டு ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இவர்களில், சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ் குமார், சீமா அகர்வால் ஆகிய மூவரின் பெயர்கள் மத்திய அரசால் தமிழக முதல்வருக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.

அபய்குமார் சிங், வன்னி பெருமாள், சந்தீப் ராய் ரத்தோர்

முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையரான சந்தீப் ராய் ரத்தோர், 1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். இவர் டிஜிபி ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன. 1998ஆம் ஆண்டில் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளைப் பிடிப்பதில் இவர் முக்கியப் பங்காற்றினார். சமீபத்தில், இவர் சென்னை காவல் ஆணையர் பதவியிலிருந்து தமிழ்நாடு காவலர் பயிற்சி அகாடமிக்கு மாற்றப்பட்டார்.

சந்தீப் ராய் ரத்தோர் மீது சில பணித்திறன் தொடர்பான புகார்கள் எழுந்ததையடுத்து, தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் அபய்குமார் சிங் அல்லது சீமா அகர்வாலை அடுத்த டிஜிபியாக நியமிக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, சீமா அகர்வால் இந்தப் பட்டியலில் தற்போது முன்னிலையில் இருக்கிறார்.

சீமா அகர்வால் டிஜிபி

சீமா அகர்வால் டிஜிபி ஆனால், லத்திகா சரணுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு மீண்டும் ஒரு பெண் டிஜிபி வருவார். வரவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த ஓராண்டு தமிழக அரசுக்கு மிக முக்கியமானது. இக்காலகட்டத்தில் ஆளும் கட்சிக்கு நம்பிக்கையான ஒருவர் டிஜிபி பொறுப்பில் இருப்பது அவசியமாகும். தேர்தல் பணிகளுடன் சட்டம் ஒழுங்கை திறம்பட நிர்வகிப்பது பெரிய சவால். அதனாலேயே முதலமைச்சர் ஸ்டாலின் இப்பதவிக்கு உகந்தவரைத் தேர்வு செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+