பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட்டவுன் ஆரம்பமாகிவிட்டது என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

அதில், 27% பேர் #Unemployment-தான் முக்கியப் பிரச்சினை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும், 55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.
இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.

'சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது! என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Lokniti CSDS என்ற ஆய்வு அமைப்பு தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில் 62 சதவீதம் பேர் வேலையின்மை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். 12 சதவீதம் பேர் மட்டுமே வேலை கிடைப்பது எளிது என கூறியுள்ளனர்.
முஸ்லீம் சமூகத்தில் 67 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு பெறுவது கடினம் என கூறிய நிலையில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 63 சதவீத இந்துக்களும் பழங்குடியினர்களில் 59 சதவீதம் பேரும் அதையே சொல்லியுள்ளனர். வெறும் 17 சதவீதம் பேர் மட்டுமே வேலை எளிதாக கிடைக்கிறது என கூறியுள்ளனர்.
76 சதவீதம் பேர் பணவீக்கம் தங்களை கடுமையாக பாதித்ததாகவும் தெரிவித்துள்ளனர். அது போல் 71 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு தங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த கருத்து கணிப்பை இந்த அமைப்பானது 19 மாநிலங்களில் 10,019 பேரிடம் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.
55 சதவீதம் பேர் கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். ஊழலுக்காக 25 சதவீதம் பேர் மத்திய அரசையும், 16 சதவீதம் பேர் மாநில அரசையும் குறை கூறுகிறார்கள். வாங்கும் ஊதியத்தில் 36 சதவீதம் பேர் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதாகவும் ஆனால் பணத்தை சேமிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications