சர்ச்சையில் ஸ்டாலின்.. முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் நடந்ததை கவனிச்சீங்களா.. பரவும் வீடியோ
சென்னை: பசும்பொன் முத்துராமலிங் தேவரின் குருபூஜையொட்டி முதல்வர் ஸ்டாலின் நேற்று பசும்பொன் செய்து அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில் தற்போது சர்ச்சை உருவாகி உள்ளது. அதற்கு அருகே நின்ற திமுக எம்எல்ஏ காதர்பாஷா முத்துராமலிங்கம் செய்த செயல் தான் காரணம்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் அமைந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரரான இவர் பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களை எதிர்த்து போராடினார்.

குறிப்பாக சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையை அனுப்பி வைத்தவர் தான் முத்துராமலிங் தேவர். அதேபோல் எம்பி, எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார்.
முத்துராமலிங்க தேவரின் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி நடத்தப்பட்டு வருகிறது. நேற்றும் குருபூஜை நடந்தது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில் நேற்று முத்து ராமலிங் தேவரின் 117வது பிறந்த நாள் மற்றும் 62-வது குருபூஜை நடந்தது.

இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்களான முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலர் பசும்பொன்னுக்கு நேரில் சென்று முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதற்கிடையே தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோ என்பது முதல்வர் ஸ்டாலின் தொடர்பானது. வீடியோவில் நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் பசும்பொன்னில் முத்துராமலிங் தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் காட்சிகள் உள்ளன. இதில் சர்ச்சை என்னவென்றால் அவர் திருநீறு பூசாமல் போனது தான் என்று குறிப்பிட்டு வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அதாவது முதல்வர் ஸ்டாலின், முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் சென்று மாலை அணிவிக்கிறார். அதன்பிறகு மலர்தூவி மரியாதை செய்கிறார். இந்த வேளையில் ஸ்டாலின் அருகே தாம்பூலத்தில் திருநீறு மற்றும் கற்பூரம் இருந்தது. இந்த தாம்பூலத்தை ஸ்டாலின் அருகே நின்ற ராமநாதபுரம் எம்எல்ஏ கதார்பாஷா முத்துராமலிங்க அப்படியே சிறிது நகர்த்தி வைக்கிறார்.
மேலும் ஸ்டாலின் திருநீர் எதுவும் பூசவில்லை. அதேபோல் அங்கிருந்தவர் திருநீர் பூசுவதற்கான தாம்பூலத்தை நீட்டவும் இல்லை. மாறாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், சீமான் உள்ளிட்டவர்கள் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செய்தபிறகு அங்குள்ள பூசாரி வழங்கிய ஆரத்தி தட்டில் இருந்து திருநீறை எடுத்து நெற்றியில் பூசினர். இந்த காட்சிகளை ஒப்பிட்டு முதல்வர் ஸ்டாலினை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் திருநீறு பூசவில்லை என்று இதற்கு முன்பும் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி












Click it and Unblock the Notifications