44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழகத்தில் கொண்டு வந்தது எப்படி?.. விளக்கிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையில் நடைபெறுவது ஏன் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ளார்.
Recommended Video
சென்னை அருகே மாமல்லபுரத்தில் பூஞ்சேரியில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின்,மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல் முருகன், தமிழக அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் கூறுகையில் இந்த நேரு ஸ்டேடியத்தில் இது போன்ற பன்னாட்டு விளையாட்டு போட்டியின் தொடக்க விழா நடைபெறுவது சர்வதேச அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது. குஜராத் முதல்வராக இருந்த போது செஸ் விளையாட்டுப் போட்டியை நடத்தியவர் பிரதமர் மோடி.

ஒலிம்பியாட்
44வது செஸ் ஒலிம்பியாட் தமிழ்நாட்டில் நடப்பதற்கு தமிழக அமைச்சர்கள் சிரத்தை எடுத்துக் கொண்டனர். கடின உழைப்பு காரணமாக தமிழகத்திற்கு இத்தகைய பெருமை கிடைத்துள்ளது. இந்தியாவில் முதல்முறையாக இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிகள் ரஷ்யாவில் நடைபெறுவதாக இருந்தது.

கொரோனா
ஆனால் அங்கு கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அந்த போட்டி அங்கு நடத்த இயலாத நிலை இருந்தது. அப்போதுதான் இந்த போட்டியை இந்தியாவில் நடத்தலாமா என ஆலோசனைகள் நடத்தப்பட்டன. உடனே நான் அதிகாரிகளை அழைத்து ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடப்பதானால் நம் தமிழகத்தில்தான் நடக்க வேண்டும். அதை கேட்டு பெறுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.

சர்வதேச போட்டி
அதன்படி தமிழகத்தில் நடைபெறுவதாக கடந்த மார்ச் மாதம் நான் அறிவித்தேன். பொதுவாக இது போன்ற சர்வதேச போட்டிகளை நடத்த குறைந்தது18 மாதங்களாவது ஏற்பாடுகளை செய்ய நேரம் எடுக்கும். ஆனால் தமிழகத்தில் நான்கே மாதங்களில் இந்த போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர் மெய்யநாதன், அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications