சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்.. 6 துறை அதிகாரிகள், அமைச்சர்களை வரச்சொல்லுங்க.. குலுங்கிய கோட்டை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு திட்டங்கள் சரியான நேரத்தில், திறம்படச் சென்று மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் நிலை குறித்து கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கும், அரசாங்க செயல்பாட்டில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது தவறாமல் நடத்துகிறார். மாநில அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாட்டை அவ்வப்போது கண்காணித்து, அவற்றின் நிறைவேற்றத்தில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அதை கண்டறிவது இந்த ஆய்வுகளின் முக்கிய நோக்கமாகும்.

Tamil Nadu Government Notification magalir urimai thogai

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு கூட்டம்

இன்றைய கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் ஆறு முக்கியமான துறைகளின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் விரிவான துறை வாரியான ஆய்வை மேற்கொண்டார். அதன்படி, சட்டத்துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, சிறப்பு முயற்சிகள் துறை மற்றும் நிதித்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்தார். ஒவ்வொரு துறையின் கீழும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் பணிகளின் எண்ணிக்கை, இதுவரை வெற்றிகரமாக முடிக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை, நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை, நிலுவையில் உள்ள திட்டங்கள் மற்றும் தாமதத்திற்கான காரணங்கள், கைவிடப்பட்ட அல்லது நிறுத்தப்பட்ட திட்டங்கள் ஏதேனும் உண்டா, அப்படி இருந்தால் அவை ஏன் முழுமையடையாமல் விடப்பட்டன என்பன குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் நோக்கம் முன்னேற்றத்தை மதிப்பிடுவது மட்டுமல்லாமல், நிலுவையில் உள்ள பணிகளை விரைவுபடுத்தவும், பொதுச் சேவைகளை வழங்குவதில் தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்கவும் துறைகளை ஊக்குவிப்பதாகும். முடிக்கப்படாத பணிகளுக்கான தெளிவான காலக்கெடுவை வழங்கவும், சாத்தியமான இடங்களில் இடையூறுகளைத் தீர்க்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்

சில துறைகளில் பணிகள் செய்யப்படாத விஷயங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அதற்கான காரணங்களை கண்டிப்புடன் கேட்டறிந்தார். ஏன் சில பணிகள் அறிவித்தபடி நடக்கவில்லை என்று கடுமையான கேள்விகளை எழுப்பினார். சில சவால்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு, சரியான நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இன்னொரு பக்கம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களை முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரமாக கண்காணித்து வருகிறார். இந்த முகாம்களில் பணிகள் முறையாக நடக்கிறதா, மக்களின் விண்ணப்பங்கள் மற்றும் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறதா என்பதை அவர் தீவிரமாக விசாரித்து வருகிறாராம்.

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள்

'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில் நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பம் செய்வதற்கு நவம்பர் 30 வரை கால அவகாசம் உள்ளது. எனவே, அவசரப்படாமல் பொறுமையாக விண்ணப்பிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை முகாம்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், பல திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனைகளும் இங்கு வழங்கப்படுகின்றன. இதை பற்றியும் முதல்வர் ஸ்டாலின் இன்று கேட்டறிந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+