Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகப்பேறு விடுப்பு! பெண் அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து ஓராண்டாக உயர்த்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்களின் பதவி உயர்வுக்காக மகப்பேறு விடுப்பு காலத்தையும் அனுபவமாக கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என முதல்வர் ஸ்டாலின், தமிழக சட்டசபையில் அறிவித்துள்ளார்.

mk stalin tamil nadu

தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதங்களில் இருந்து ஓராண்டாக உயர்ந்துள்ளது என அறிவித்தார்.

அது போல் பொங்கல் பரிசுத் தொகை ரூ 1000 உயர்கிறது. அரசு ஊழியர்களுக்கு 01.01.2025 முதல் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படும். அரசு அலுவலகர்கள் ஈட்டிய விடுப்புக்கு பண பலன் பெறுவது இந்த ஆண்டே அமலாகிறது.

அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் 10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும். இவ்வாறு ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

9 மாதங்கள்

மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் அவ்வாறு மகப்பேறு விடுப்பில் செல்லும் ஊழியர்களுக்கு பதவி உயர்வின் போது அந்த விடுப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதை இல்லை.

பெண் ஊழியர்கள்

இதனால் பெண் ஊழியர்கள் பலர் சீனியாரிட்டி இருந்து பதவி உயர்வு இல்லாமல் இருந்து வருகிறார்கள். எனவே இளம் பெண்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இனி மகப்பேறு விடுப்பும் பணிக்காலமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

3 மாதங்கள்

அரசு ஊழியர்களுக்கு கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் 90 நாட்களாக இருந்த மகப்பேறு விடுப்பை கடந்த 2011 ஆம் ஆண்டில் 6 மாதங்களாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார்.

6 மாதங்களிலிருந்து 9 மாதங்கள்

இதைத் தொடர்ந்து 6 மாதத்தை 9 மாதங்களாக உயர்த்துவதாகவும் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். பிரசவத்திற்கு முன்பும் பின்பும் எத்தனை மாதங்கள் பிரித்து விடுப்பு எடுக்கலாம் என்பதை அந்தந்த பெண் ஊழியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.

9 மாதங்களிலிருந்து 12 மாதங்கள்

இதைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு ஓராண்டாக உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் பட்ஜெட்டின் போது அறிவித்திருந்தார்.

2021 பட்ஜெட்டில் அறிவிப்பு

பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும். இரண்டிற்கும் குறைவான குழந்தைகள் உள்ள மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி 1.7.2021 முதல் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்சினை என்ன

இவ்வாறு மகப்பேறு விடுப்பில் செல்லும் பெண்களின் பதவி உயர்வை கணக்கில் எடுக்கும் போது அவர்கள் பணியாற்றியதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வதாகவும் மகப்பேறு விடுப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாததால் ஏராளமான பெண்களுக்கு தகுதி இருந்து பதவி உயர்வு, பணப்பலன்கள் உள்ளிட்டவை கிடைக்கவில்லை என அதிருப்தி நிலவி வந்தது.

சட்டசபை தேர்தல் 2026

இந்த நிலையில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் மனதை முதல்வர் ஸ்டாலின் குளிர வைக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+