குடியரசுத் துணை தலைவர் ஜெகதீஷ் தன்கரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: தமிழக நலன் சார்ந்த கோரிக்கை தொடர்பான மனுவை அளிக்க பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் சந்திக்கிறார்.
மாமல்லபுரத்தில் 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் இந்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்ததாக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதிவிட்ட ட்வீட்டில் விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரு பண்புகள் ஆகும். தொடர்ச்சியாக உங்களது ஆதரவையும் இது போன்ற இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என அந்த ட்வீட்டில் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்றார். அவரை திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிரதமர் மோடியை இன்று மாலை 4.30 மணிக்கு சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்கிறார். தமிழகத்திற்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் வைத்திருக்கிறார். அந்த மசோதாக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அவருக்கு அறிவுறுத்த வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைக்கவுள்ளார்.
அது போல் புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை காலை 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு புத்தகங்களையும் பரிசாக அளித்தார். அடுத்தது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் நேரில் சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின். நேற்று நடந்த திருமாவளவன் மணிவிழாவில் நான் டெல்லிக்கு என்ன காவடி எடுக்கவா போகிறேன் என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications