Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“டபுள்”.. போலீசார் குடும்பங்களுக்கு ‘ஸ்வீட் ஷாக்’ கொடுத்த முதல்வர் ஸ்டாலின்! கல்வி உதவித்தொகை உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவலர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதோடு, காவலர்களின் குழந்தைகளுக்குக் கல்விப் பரிசுகள் வழங்குவதற்கான நிதியை 'டபுள்' மடங்காக உயர்த்தியும் முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். காவலர்களின் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி உதவித்தொகை ரூ. 25 ஆயிரத்தில் ரூ.30,000 ஆக உயர்த்தப்படும் என்றும், இனிமேல் 100 மாணவர்களுக்கு பதிலாக 200 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

CM Stalin order to increase scholarships for Police officers children

அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக காவலர்களின் குழந்தைகளின் சிறப்புக் கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். உயர்த்தப்பட்ட சிறப்பு கல்வி உதவித்தொகை மற்றும் கல்விப்பரிசுகள் வழங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவினத்திற்காக, தமிழ்நாடு காவலர் நல நிதிக்கு அரசால் தற்போது வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையினை ரூ.1.2 கோடியிலிருந்து ரூ.2.96 கோடியாக உயர்த்தியும் முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆண்டு ஒன்றுக்கு காவலர்களின் குழந்தைகளுக்குச் சிறப்புக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்படி 100 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டு 200 மாணவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும், காவலர்களின் குழந்தைகளுக்குக் கல்விப் பரிசுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பரிசுத் தொகை இரட்டிப்பாக்கப்படும் என்றும் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், காவலர்களின் குடும்பத்தைச் சார்ந்த 200 மாணவர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் 4 வருடங்களுக்கு மொத்தம் ரூ.24 கோடியில் சிறப்பு கல்வி உதவித் தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், 37 காவல் மாவட்டங்கள் மற்றும் 9 காவல் ஆணையரகங்களில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகளுக்குக் கல்விப் பரிசுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முறையே முதல் பத்து இடங்களைப் பெறும் 460 மாணவ, மாணவியர்களுக்கு தற்போது வழங்கப்படும் மொத்த கல்விப் பரிசுத்தொகையை ரூ.28,29,000ல் இருந்து ரூ.56,58,000 ஆக இரட்டிப்பாக்கி கல்விப்பரிசுகள் வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும் உயர்த்தப்பட்ட சிறப்புக் கல்வி உதவித்தொகை மற்றும் கல்விப்பரிசுகள் வழங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவினத்திற்காக, தமிழ்நாடு காவலர் நல நிதிக்கு அரசால் தற்போது வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையினை ரூ.1.2 கோடியிலிருந்து ரூ.2.96 கோடி ஆக உயர்த்தியும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+