2 ஆம் தேதி ராமநாதபுரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. கரூர் துயரத்தால் ரத்தான பயணம் தேதி மாற்றம்
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 2ஆம் தேதி ராமநாதபுரம் செல்கிறார். இன்று (செப்டம்பர் 29) ராமநாதபுரம் செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் 2, 3 ஆம் தேதிகளில் ராமநாதபுரத்தில் கள ஆய்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டங்கள் நடத்தியும், நலத் திட்டங்கள் வழங்கியும் வருகிறார். அந்தவகையில் முதல்வர் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இன்று செப்டம்பர் 29 ஆம் தேதி (திங்கள்கிழமை) வருகை தந்து, செப்டம்பர் 30 ஆம் தேதி (நாளை) மாவட்ட வளர்ச்சிக்காக அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தவும், நலத் திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டது.

ராமநாதபுரத்தில் இன்று மாலை 6 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் ரோடு ஷோவுக்கும், நாளை புல்லங்குடி பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், கரூர் துயர் சம்பவத்தை தொடர்ந்து முதல்வரின் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ராமநாதபுரம் நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 2ஆம் தேதி ராமநாதபுரம் செல்கிறார். இன்று (செப்டம்பர் 29) ராமநாதபுரம் செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் 2, 3 ஆம் தேதிகளில் ராமநாதபுரத்தில் கள ஆய்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ராமநாதபுரம் அருகே புல்லங்குடி பகுதியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலைய கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications