"அசுரன்" பட வசனத்தை சொல்லி.. ஆளுநருக்கு நன்றி சொன்ன முதல்வர்.. சிரித்தபடி பார்த்த ரவி.. என்னாச்சு?
சென்னை: சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் ஆளுநர் ஆர். என் ரவிக்கு நன்றி தெரிவித்தார்.
சென்னை பல்கலையின், 164வது பட்டமளிப்பு விழா தற்போது நடந்து வருகிறது. இதில், முதல்வரும், ஆளுநரும் ஒரே மேடையில் தோன்றி உள்ளனர். சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்த ஆளுநர் ஆர்.என் ரவியை பொன்னாடை போர்த்தி வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலினை ஆளுநர் ரவி கையெடுத்து கும்பிட்டார். ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

சென்னை பல்கலை
இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மாணவ, மாணவியர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அடுத்தடுத்த உயர்விற்கு ஒரு அடித்தளம் இந்த பட்டம். சென்னையின் முதல் பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம். இங்கு பல முன்னோடிகள், சாதனையாளர்கள் படித்துள்ளனர்.

முன்னோடி
அவர்களை போல நீங்களும் முன்னோடியாக வேண்டும். இந்த பட்டதோடு முடிக்காமல் இன்னும் மேலும் மேலும் நீங்கள் படிக்க வேண்டும். உங்களை போன்றவர்களும், ஏழைகளும் கல்வி பெற, வேலை பெற வசதியாக பல திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறது. பெண்கள் இடைநிற்றலை தவிர்க்கவே மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

திட்டங்கள்
இலவச பஸ்பாஸ், இலவச தங்கும் விடுதி போன்ற திட்டங்களை பொருளாதார நெருக்கடிக்கு இடையிலும் நாங்கள் வழங்கி வருகிறோம். சென்னை பல்கலை பல சிறப்பான முயற்சிகளை எடுத்து வருகிறது. சென்னை பல்கலையில் திராவிட இயக்க ஆராய்ச்சி நிறுவனத்திற்கான விதை போடப்பட்டது. அது தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்டாலின் பேச்சு
ஆய்வு கட்டுரைகளின் விவரங்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு அறிவுசார் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சென்னை பல்கலை கையெழுத்து போட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. திருக்குறள் இங்கு விருப்ப பாடமாக இருப்பதை எண்ணி மகிழ்கிறேன். மாணவர்களை நல்வழிப்படுத்த பயன்படும். '

அசுரன் பட வசனம்
கல்விதான் உங்களுடைய சொத்து. அதை யாரும் உங்களிடம் இருந்து எடுத்துக்கொள்ள முடியாது என்று அசுரன் பட வசனத்தை கூறிய முதல்வர் ஸ்டாலின்.. கல்வியை வளப்படுத்த அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அரசின் நல்ல முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆளுநர் ரவிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் நன்றி தெரிவித்த போது அதை மகிழ்வுடன் ஆளுநர் பார்த்துக்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications