எதிர்பார்க்காத பதிலடி வரப்போகிறது! டாப் சட்ட வல்லுனர்களை சந்தித்த ஸ்டாலின்.. இன்றே முக்கிய முடிவு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்கி நேற்று ஆளுநர் ஆர். என் ரவி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்ட ஆலோசனை நடத்தி வருகிறார்.
பெரும் பரபரப்பிற்கு இடையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி நேற்று அறிவித்தார். சமீபத்தில் செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக வைத்துக்கொள்ள முடியாது என்று ஆளுநர் ஆர். என் ரவி கூறினார். அமைச்சரவை மாற்றத்திற்கான உண்மையான காரணத்தை கூற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் .

ஆனால் தமிழ்நாடு அரசு.. செந்தில் பாலாஜியின் இலாக்கா மாற்றத்திற்கு காரணம் அவரின் உடல்நிலைதான் என்று அறிவித்தது. அதோடு இல்லாமல் ஆளுநர் ஆர். என் ரவிக்கு இதில் விளக்கம் கேட்கும் அதிகாரம் எல்லாம் இல்லை என்றும் அறிவித்தது. இதையடுத்து அமைச்சரவை மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை என்றும் அறிவித்தார்.
ஆனாலும் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த நிலையில்தான் அமைச்சர் ஒருவர் மீது புகார் உள்ளதாலும், அவர் நீதிமன்ற காவலில் உள்ளதாலும் அவரை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார். ஆளுநருக்கு பொதுவாக இந்த அதிகாரம் கிடையாது. அமைச்சரை தன்னிச்சையாக நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.

ஆளுநரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து சட்ட ரீதியாக அவரை எதிர்கொள்வோம் என்று ஆளும் திமுக அறிவித்தது. முதல்வர் ஸ்டாலினும் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று அறிவித்தார். இந்த நிலையில் 5 மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை ஆளுநர் ஆர். என் ரவி மாற்றினார். அதாவது செந்தில் பாலாஜியை நீக்கியது செல்லாது என்று அறிவித்தார்.
தேசிய அளவில் இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் தனது முடிவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதோடு இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்தான் தனக்கு அறிவுறுத்தியது. அவர்களின் அறிவுரை காரணமாக எனது அறிவிப்பை நிறுத்தி வைக்கிறேன். அதோடு இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுக்கிறேன், என்றும் ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார் .
ஆலோசனை: இந்த நிலையில் மூத்த அமைச்சர்கள், சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆலோசனை செய்ய வருகிறார்.செந்தில் பாலாஜி - ஆளுநர் ஆர். என் ரவி விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், அமைச்சர் ரகுபதி பங்கேற்று உள்ளார்.

இதில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சுண்முகசுந்தரம் பங்கேற்றுள்ளார். மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் பங்கேற்றுள்ளார். சட்ட ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் ஆளுநருக்கு எதிராக மிக பெரிய நடவடிக்கை ஒன்றை எடுக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆலோசனை செய்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
நீதிமன்ற காவல்: சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடந்தன. தொடர்ந்து 5 நாட்களாக தமிழ்நாடு முழுக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது.
அதன்பின் அமலாக்கத்துணை ரெய்டும் நடந்தது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு அடிப்படையில் ரெய்டுக்கு உள்ளான செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக!











Click it and Unblock the Notifications