மிரட்டும் டெங்கு காய்ச்சல்.. மானாவரியாக உற்பத்தியான ஏடீஸ் கொசு.. முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
தமிழகத்தில் கடந்த 8ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 120 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

நேற்று முன் தினம் அதாவது 14 ஆம் தேதி ஒரே நாளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 18 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு என தனியாக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தேவையான மருந்து மாத்திரைகளும் கையிருப்பில் உள்ளன.
தினசரி டெங்கு பாதிப்பு சராசரியாக 15 முதல் 20 வரை பதிவாகி வருகிறது. டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த டெங்குவை பரப்பும் ஏடீஸ் வகை கொசுக்கள் நன்னீரில் மட்டுமே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கக் கூடும்.
தமிழகத்தில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது, இதனால் யாருக்கெல்லாம் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். மேலும் ஏடீஸ் கொசு உற்பத்தியை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திறந்த வெளியில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்தால் ரத்தக்கசிவு ஏற்படும். இதனால் நோயாளிக்கு ரத்தம் ஏற்றுவது முக்கியமானது. இதனால் ரத்த வங்கிகளில் போதுமான அளவுக்கு ரத்தம் இருப்பதையும் உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 12 ஆம் தேதி தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த நிலையில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிப்பதை தடுக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்றைய தினம் ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், அரசு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதில் டெங்குவை ஒழிப்பது குறித்தும் உயிரிழப்பை தடுப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும் உயிரிழப்பு ஏற்படும் வரை காய்ச்சல் பாதிக்கப்பட்டோரை வீட்டிலேயே வைத்திருக்காமல் அரசு மருத்துவமனைகளில் அனுமதிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications