தருமபுரி மாவட்டத்தை பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடுங்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி கோரிக்கை
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரிக்கு வருகை தந்துள்ள நிலையில், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தருமபுரி மாவட்டம் மீதான புறக்கணிப்பைக் கைவிட்டு, காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரியின் ஐந்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் தோல்வியடைந்ததால், பழிவாங்கும் நோக்கில் தருமபுரி மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். "எனக்கு வாக்களித்தவர்கள் வருந்தாத அளவிற்கும், வாக்களிக்காதவர்கள் தவறு செய்துவிட்டோமோ என்று வருந்தும் அளவிற்கும் எனது பணி இருக்கும்" என்ற முதலமைச்சரின் பேச்சு வெறும் வசனமாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில், "தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அவசியமான பல திட்டங்களை திமுக அரசு வேண்டுமென்றே முடக்கி வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்திட்டங்கள்: விவசாயத்தை மேம்படுத்த உதவும் இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு அக்டோபரில் பாமக நடத்திய முழு அடைப்புப் போராட்டத்திற்குப் பிறகும் அரசு ஆர்வம் காட்டவில்லை. தருமபுரியில் சிப்காட் வளாகம் அமைப்பதற்காக 1733 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தும், தொழிற்சாலைகளைத் தொடங்குவதில் திமுக அரசு தாமதம் செய்வதாகக் குற்றம்சாட்டினார்.
1941 முதல் நிலுவையில் உள்ள இந்த ரயில் பாதை திட்டத்திற்காக, தேவையான நிலத்தைக் கையகப்படுத்த அரசு அலட்சியம் காட்டுவதாகவும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தப் பணியும் நடக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எண்ணேகோல் புதூர், தும்பலஅள்ளி, பஞ்சப்பள்ளி, புலிக்கரை மற்றும் ஆனைமடுவு அணை போன்ற நீர்ப்பாசனத் திட்டங்களையும் அரசு செயல்படுத்த ஆர்வம் காட்டவில்லை என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட மக்களும் தமிழ்நாடு குடிமக்கள் தான். அவர்கள் செலுத்தும் வரிப்பணத்தில் தான் அரசு செயல்படுகிறது. அதனால், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, காவிரி உபரிநீர் திட்டம், சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் மொரப்பூர் ரயில் பாதை திட்டங்களுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளைய விழாவில் வெளியிட வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
-
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
பாலில் விழுந்த மாம்பழம்.. அன்புமணி கைக்கு மொத்தமாய் போன பாமக! வலை போட்டு வேட்பாளர்களை தேடும் அய்யா! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications