100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்கவும் -பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!
சென்னை: ஊரகப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்த மாநில அரசிடம் மேற்கொண்டு நிதி ஆதாரமில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ், நேற்று தான் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக சுட்டிக்காட்டிய ஒரே நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாக ஆயிரக்கணக்கான கிராமப்புற குடும்பங்கள் தவித்து வருவதாகவும் இதனால் நவ.1 வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தொகையான ரூ.1,178 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதால் கிராமப்புறங்களில் இருந்து பல குடும்பங்கள் நகர்ப்புறம் நோக்கி வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டாவது தமிழகத்திற்கான 100 நாள் வேலை திட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே தமிழகத்தில் 92.31 லட்சம் குடும்பங்கள் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கேட்டு பதிவு செய்துள்ள நிலையில், இதுவரை 63.35 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நிதிநிலை மோசமாக உள்ள சூழலில், 100 நாள் வேலைத்திட்டத்தின் நாட்கள் எண்ணிக்கையை 150 ஆகவும், நாள் ஊதியத்தை 273 ரூபாயிலிருந்து ரூ.300 ஆகவும் உயர்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று தமிழக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட தமிழ்நாடு அரசு ரூ.1,999 கோடியை கூடுதலாக செலவழித்துள்ளதாக கூறியுள்ள ராமதாஸ், மத்திய அரசின் நிதி வரும் வரை காத்திருக்காமல் மாநில அரசு தனது வருவாய் நிதியை கொண்டு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications