மகளிர் உரிமை தொகை.. அபராதம் பிடிக்காமல் இருக்க 2 ஆப்சன்.. முதல்வருக்கு வங்கி ஊழியர் சங்கம் கடிதம்
சென்னை: வங்கிகள் குறைந்த இருப்பிற்காக வசூலிக்கப்படும் அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது சாதாரண சேமிப்பு கணக்கு வைத்துள்ள பெண்களின் கணக்கை 'ஜீரோ பேலன்ஸ்' கணக்காக மாற்ற அரசு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் சி.எச்.வெங்கடாசலம் கடிதம் எழுதி உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் படி மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் சுமார் ஒரு கோடியே 6 லட்சம் பெண்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கி கணக்கில் அரசு ரூ.1000 செலுத்திய பின்னர், மினிமம் பேலன்ஸ் இல்லை என்று பலரது கணக்கில் குறிப்பிட்ட தொகையை வங்கிகள் பிடித்துக்கொண்டன. இதனால் ஆயிரம் ரூபாய் பணத்தை முழுதாக எடுக்க சென்றவர்களுக்கு அந்த தொகை கிடைக்கவில்லை. 900 ரூபாய் என்கிற அளவில் தான் கிடைத்துள்ளது. சிலருக்கு அந்த பணமும் கிடைக்கவில்லை.
மினிமம் பேலன்ஸ் இல்லை என ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை பிடிக்கக்கூடாது என்று வங்கிகளுக்கு தமிழக அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. அதனை மீறி அபராதம் வசூலிக்கப்பட்டதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்தது.
பொதுத்துறை வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் 1000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். அதேநேரம் பிரதமர் மோடி தொடங்கி வைத்த ஜன்தன் கணக்கு மட்டும் பூஜியம் சேமிப்பு வங்கி கணக்கு ஆகும். அந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் மினிமம் பேலன்ஸ் எவ்வளவு இருந்தாலும் பிரச்சனை இல்லை என்ற நிலை உள்ளது.
இதனிடையே வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்திய போதும், அபராதம் விதிக்கப்பட்டதுசலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வங்கி தரப்பினர் கூறும் போது, பொதுவாக ரூ.1000-ம் குறைந்தபட்சம் பேலன்ஸ் வங்கி கணக்கில் வைத்திருக்க வேண்டும் . அப்படி இல்லை என்றால் வங்கி கணக்கிற்கு பணம் தானாகவே அபராத தொகை வசூலிக்கப்படும் என்றும் இதுதான் நடந்தது என்றும் கூறினார்கள்.
இதனிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் சி.எச்.வெங்கடாசலம் இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதனை எடுக்கும்போது சில கஷ்டங்களும், பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
தற்போது அனைத்து வங்கிகளிலும் 2 வகையான சேமிப்பு கணக்குகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. ஒன்று 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கு என்று சொல்லப்படும் கணக்கு ஆகும்.இந்த கணக்கில் சிறு தொகை கூட இருப்பு இல்லாமல் முழுமையாக எடுக்கவும், டெபாசிட் செய்யக்கூடிய வசதியும் உள்ளது. இவ்வகை வங்கி கணக்கில் இருந்து முழுமையான தொகை எடுத்தாலும கூட அபராதம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.
இரண்டாவது வகை சாதாரண சேமிப்பு கணக்கு ஆகும். இந்த கணக்கில் குறைந்தபட்சம் ரூ.500 அல்லது ரூ.1000 இருப்பு இருக்க வேண்டும். குறைந்தபட்ச இருப்பை விட பணம் குறையும்போது அபராதம் தானாகவே வசூலிக்கப்படும்.
தற்போது உள்ள வங்கி விதிகளின்படி ஜீரோ பேலன்ஸ் கணக்கை சாதாரண சேமிப்பு கணக்கிற்கு மாற்ற முடியும். ஆனால் சாதாரண சேமிப்பு கணக்கை ஜீரோ பேலன்ஸ் கணக்கிற்கு மாற்றம் செய்ய முடியாது.
தற்போது மகளிர் உரிமை திட்டத்தில் பெரும்பாலான பயனாளிகள் கொடுத்துள்ள வங்கி கணக்கு சாதாரண சேமிப்பு கணக்காகும். 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கு வைத்திருக்கவில்லை. அதனால் குறைந்தபட்ச இருப்பு இல்லாத காரணத்திற்காக குறிப்பிட்ட சிறு தொகை அபராதமாக வசூலிக்கப்படுவது நடக்கிறது.
எனவே இதற்கு தீர்வாக, வங்கிகள் குறைந்த இருப்பிற்காக வசூலிக்கப்படும் அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது சாதாரண சேமிப்பு கணக்கு வைத்துள்ள பெண்களின் கணக்கை 'ஜீரோ பேலன்ஸ்' கணக்காக மாற்ற தமிழக அரசு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். இத்திட்டத்தில் பயன் அடையும் பெண்கள் எவ்வித கஷ்டமும் இல்லாமல் அபராத கட்டணமும் இன்றி முழுமையாக பணத்தை பெற இந்த இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றலாம்" என இவ்வாறு தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் சி.எச்.வெங்கடாசலம் தனது கடிதத்தில் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications