CM விஜய்: கோட்டையில் போடும் முதல்ல கையெழுத்து.. எப்படிபார்த்தாலும் பெண்களுக்கு ஜாக்பாட்.. 3 முக்கிய திட்டம்!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. கட்சி துவங்கப்பட்டு 2 வருடங்களே ஆன நிலையில், மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இப்போது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு என்னவென்றால், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற உடன் தனது முதல் கையெழுத்தை எந்தத் திட்டத்திற்கு போடுவார் என்பதுதான். முதல் கையெழுத்து எதில்?

ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்
விஜய் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்த வாக்குறுதிகளில் மிகவும் கவனம் ஈர்த்தது இந்தச் சிலிண்டர் திட்டம் தான். இல்லத்தரசிகளுக்கும், குடும்ப செலவுகளை கட்டுப்படுத்தும் முக்கியமான இந்தத் திட்டம், எரிவாயு விலை உயர்வால் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும்.
ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும் இந்தத் திட்டத்தில் தான் விஜய் தனது முதல் கையெழுத்தாக இடுவார் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக தற்போது கேஸ் விலை 920 ரூபாய் வரையில் உயர்ந்துள்ள நிலையில் இத்திட்டத்தில் தான் முதலில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
8 கிராம் தங்கம் + பட்டு சேலை
தவெகவின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான பல முக்கியத் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. ஏழைப் பெண்களின் திருமண உதவியாக 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுச் சேலை வழங்கப்படும்.
இந்த திட்டம் மிகவும் முக்கியமானதாக இருந்தாலும் இன்று ரீடைல் சந்தையில் ஒரு பவுன் தங்கம் 1,22,184 ரூபாயாக இருக்கும் வேளையில், எத்தனை பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பலன் அடைவார்கள் என்பதில் பெரும் கேள்வி உள்ளது. இதைவிட முக்கியமாக இதற்கான நிதி ஆதாரம் எப்படி உருவாக்கப்படுகிறது என்பது தான்.
மாதம் 2500 ரூபாய்
தற்போது மகளிருக்கு மாதந்தோறும் வழங்கும் 1000 ரூபாய் தொகையை ரூ.2,500 உயர்த்தி வழங்கும் திட்டமும் விஜய்யின் முதல் முடிவுகளில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மகளிர் உரிமை தொகை வர்த்தக சந்தைக்கும் பொருளாதாரத்திற்கும் பெரிய லாபத்தை கொடுக்கும் விஷயமாக இருந்தாலும் 1000 ரூபாயில் இருந்து 2500 ரூபாயாக உயர்த்துவது மூலம் நிதி நெருக்கடி உருவாகும்.
இந்த 3 திட்டங்களில் எது அறிவிக்காப்பட்டாலும் பெண்களுக்கு ஜாக்பாட் தான். இதேவேளையில் இத்திட்டத்திற்கான நிதியை உருவாக்க தேவையான வருவாய் ஈட்டும் வழிகளையும், பொருளாதார வளர்ச்சியை உருவாக்க வேண்டியது கட்டாயம். இதை சிஎம் விஜய் எப்படி செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதேபோல் இத்திட்டங்களை உடனடியாக விஜய் செயல்படுத்த முடியுமா அல்லாது காத்திருந்து நிதி நிலை மேம்பட்ட உடன் அறிவிக்கப்படுமா என்பதும் அடுத்த முக்கியமான கேள்வி.
வாக்கு எண்ணிக்கை
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகள் படி தவெக 9 தொகுதிகளில் வெற்றி பெற்று 100 இடங்களில் முன்னிலை வகித்து மொத்தம் 109 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
திமுக 6 இடங்களில் வெற்றி பெற்று 53 இடங்களில் முன்னிலையுடன் 59 இடங்களிலும், அதிமுக 44 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
தவெகவின் புதிய அலை தமிழ்நாட்டு அரசியலை முழுமையாக மாற்றியமைக்கும் வேகத்தில் செல்கிறது!












Click it and Unblock the Notifications