20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்
சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி இன்று வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்க நடிகர் அஜித்குமார் இன்று இரவு துபாயில் இருந்து சென்னை திரும்பினார். அஜித்குமார் சென்னை வந்த நிலையில் முதல்வர் விஜய் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அஜித்குமாரின் தாயார் மோகினியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி. இவருக்கு வயது 85. வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல் உபாதையால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் இன்று காலையில் மோகினி காலமானார். அஜித் குமார் தனது தாயை சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிலேயே வைத்து பார்த்து கொண்டார்.
இந்நிலையில் தான் அஜித் குமார் கார் ரேஸ்க்காக துபாயில் இருந்த நிலையில் தாயார் மறைந்த செய்தியை கேட்டு சென்னை புறப்பட்டார். இன்று இரவு சுமார் 9 மணியளவில் அஜித் குமார் சென்னை வருகை தந்தார். அதன்பிறகு அவர் காரில் தனது இல்லத்துக்கு சென்றார். அஜித்குமார் வீடு திரும்பியதை அறிந்ததும் முதல்வர் விஜய் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார்.
ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் வீட்டுக்கு விஜய் நேரில் சென்று அவரது தாயாரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் கூறினார். சுமார் 20 நிமிடங்கள் வரை அஜித் குமாரின் வீட்டில் இருந்த விஜய் அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அஜித்குமாரின் தாயார் மோகினியின் உடலுக்கு நாளை காலை 8.30 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்கு நடைபெற உள்ள நிலையில் இன்று விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருந்தார். அதில், ''அருமை நண்பர் அஜித் குமார் அவர்களின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
அஜித்தின் தந்தை பிஎஸ் மணி என்கிற சுப்பிரமணியம் கடந்த கடந்த 2023ம் ஆண்டு மறைந்தார். அவரது மறைவை தொடர்ந்து இன்று தாய் மோகினி காலமாகி உள்ளார். அஜித்தின் தாய் மோகினி மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர். மோகினியின் மறைவுக்கு திரையுலகத்தை சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications