உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி
டெல்லி: தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 75 ஆண்டுகளில், உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றாமல், நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த 11வது நபர் என்ற அரிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியுள்ள 2-வது பெண் என்ற பெருமையையும், வழக்கறிஞர் நிலையிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இவரது நியமனம் நீதித்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு அறிவிப்பு
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்த மத்திய அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்தது. அதன்படி, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான கொலீஜியம் கடந்த வாரம் வி மோகனா உள்பட 5 பேரின் பெயர்களை பரிந்துரைத்தது. அந்த பரிந்துரைகளை ஏற்ற மத்திய அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர் மோகனா
புதிய நீதிபதிகளாக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷகீல் நாகு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா மற்றும் ஜம்மு-காஷ்மீர், லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பள்ளி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனத்தால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தலைமை நீதிபதி உட்பட 37 ஆக உயர்ந்துள்ளது. வி. மோகனாவுக்கு தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வி. மோகனாவின் நியமனத்தில் ஒரு சிறப்பு அம்சமும் உள்ளது. பொதுவாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுபவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், வழக்கறிஞர் நிலையிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 2வது பெண்
1950 முதல் இதுவரை வெறும் 10 பேர் மட்டுமே வழக்கறிஞர் நிலையிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது வி. மோகனா அந்த பட்டியலில் 11வது நபராக இடம்பிடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், வழக்கறிஞர் நிலையிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், டெல்லியில் வழக்கறிஞராக பணியாற்றிய இந்து மல்ஹோத்ராவிடம் ஜூனியராக பயிற்சி பெற்றவர்தான் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்துள்ள வி. மோகனா. கோவை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த வி. மோகனா, மூத்த குடிமக்களின் சொத்துரிமை வழக்குகள், கர்நாடக ஹிஜாப் தடை வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் வாதாடி தனது திறமையை நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்கலான வழக்குகளில் திறம்பட வாதாடியவர்
* மோகனா தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி கே விஸ்வநாதனுடன் ஒரே கல்லூரியில் பயின்றவர்.
* கோவையை பூர்வீகமாகக் கொண்ட வழக்கறிஞர் வி. மோகனா, சட்டத் துறையில் நீண்ட கால அனுபவம் பெற்றவர்.
* கோவை அரசு சட்டக்கல்லூரியில் கடந்த 1988-ம் ஆண்டு சட்டம் பயின்றார்.
* கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி இவர் மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
* உச்ச நீதிமன்றத்தில் பல முக்கிய மற்றும் சிக்கலான வழக்குகளில் திறம்பட வாதாடியுள்ளார்.
* நம் நாட்டின் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட 'ஐந்தாண்டு சட்டப் படிப்பின் முதல் பேட்ச் சட்டம் பயின்றார்.
* கபில் சிபல், கே.கே. வேணுகோபால் உள்ளிட்ட புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர்களுடன் இணைந்து பல முக்கிய விவகாரங்களில் இணைந்து செயல்பட்டுள்ளார்.
-
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக














Click it and Unblock the Notifications