Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விமர்சித்தவரை விளாச! வீட்டு பெண்களை இழுத்த குஷ்புவுக்கு புதுசிக்கல்? நெல்லை போலீசுக்கு பறந்த புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது குடும்ப பெண்களை இழுத்த நடிகை குஷ்பு மீது திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர் ஒருவர் பரபரப்பான புகார் அளித்துள்ளார். இதனால் நடிகை குஷ்புவுக்கும் புது சிக்கல் ஏற்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகையாக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் குஷ்பு. தற்போது பாஜகவில் செயல்பட்டு வரும் குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு திமுக பேச்சாளராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடையில் மிகவும் இழிவாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

Complaint filled against actress Khushbu at Tirunelveli Police commissinor office for insulting family women

இதையடுத்து நடிகை குஷ்பு பத்திரிகையாளர்களை சந்தித்து கண்கலங்கினார். மேலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கடுமையாக விமர்சித்த குஷ்பு அவர் மீது தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்கும் என கூறினார். இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். மேலும் அவரை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திமுக, காங்கிரஸ் கட்சியினர் குஷ்புவிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். இந்த விவகாரத்தில் குஷ்புவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வந்தன. இதனால் குஷ்பு வலைதளங்களில் டிரெண்ட் ஆனார்.

முன்னதாக குஷ்பு கடந்த ஜூன் 15 ஆம் தேதி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் தனது கணவரும் பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி-யின் படங்களை பதிவிட்டு, ‛‛நான் 28 ஆண்டுகளுக்கு முன் காதலில் விழுந்த முகம். என் இதயத்தை இன்னும் படபடக்க வைக்கிறார் இந்த மனிதர்'' எனக்குறிப்பிட்டு அன்பின் வெளிப்பாடாக ஹார்ட்டின் எமோஜியை குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பதிவுக்கு கீழே ஜெயசங்கர் கெனாத் என்பவர், ‛‛இந்த மனிதரின் பணத்தை பாதுகாக்க நீங்கள் பாஜகவுக்கு சென்றீர்கள்'' என குறிப்பிட்டு இருந்தார். இதனால் கோபமடைந்த குஷ்பு,‛‛நீங்கள் வேண்டுமானால் உங்கள் தொழிலை பாதுகாப்பதற்காக உங்கள் வீட்டின் பெண்களை பயன்படுத்துபவராக இருக்கலாம். வெட்கம்கெட்டவர்கள்'' என்பதோடு மட்டுமின்றி இன்னும் சில வார்த்தைகளை காட்டமாக பதிவிட்டு இருந்தார்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகை குஷ்புவை விமர்சனம் செய்ததால் கைது செய்யப்பட்ட நிலையில் நடிகை குஷ்புவின் இந்த பதிலடியும் டிரெண்ட் ஆனது. குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்து கொண்டு இன்னொருவரின் குடும்பத்தின் பெண்களை இழுத்து விமர்சனம் செய்தது நியாயமா? என நெட்டிசன்கள் கேள்விகள் எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில் தான் நடிகை குஷ்பு மீது திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை முருகன்குறிச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜூ என்பவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: தேசிய மகளிர் ஆணைய தலைவி குஷ்பு ட்விட்டரில் ஜெயசங்கர் என்பவருக்கு பதில் ஒன்றை அளித்து இருந்தார்.

அதில் ‛செருப்பால் அடி, உங்கள் தொழிலை காப்பாற்றுவதற்காக வீட்டு பெண்களை பயன்படுத்துபவராக நீங்கள் இருக்கலாம். வெட்கமற்ற மனிதர்கள்' என இழிவாக விமர்சனம் செய்துள்ளார். இதனை பார்த்து என் வீட்டு பெண்கள் தாங்க முடிாத மனவேதனையும், அவமானமும் அடைந்துள்ளனர். எனவே குஷ்பு மீது சமூக வலைதளத்தில் பெண்களை இழிவாக பேசியது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+