முகம் அப்படியே சுருங்க.. கண்களில் தெரிந்த கோபம்.. தோனி ஏன் இப்படி மாறினாரு.. இதுதான் காரணமா?
சென்னை: சிஎஸ்கே கேப்டன் தோனி கடந்த சில போட்டிகளாக களத்திலேயே கோபம் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த கோபத்திற்கு பின் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
2023 ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. முக்கியமாக சிஎஸ்கே அணி ஆடும் போட்டிகள் அதிக அளவில் கவனம் பெற்றுள்ளன.

தோனியின் கடைசி சீசனாக இது இருக்கலாம் என்பதால் அதை பார்க்க லட்சக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கிவிட்டனர்.
தோனியும்.. எனக்கு பேர்வெல் கொடுக்கிறார்கள்.. நான் என் கெரியரின் கடைசி கால கட்டத்தில் இருக்கிறேன் என்றெல்லாம் க்ளூ கொடுக்க தொடங்கி விட்டார். அதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி கிட்டத்தட்ட ஓய்வு பெறுகிறார் என்பது உறுதியாகிவிட்டது.
அதனால் ரசிகர்கள் அதிக அளவில் மேட்சை பார்க்க வருகிறார்கள். கேப்டன் கூலாக இருக்கும் சிஎஸ்கே கேப்டன் தோனி கடந்த சில போட்டிகளாக களத்திலேயே கோபம் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த சில போட்டிகளுக்கு முன் மொயின் அலி பீல்டிங் செய்யும் போது அவர் மீது கோபம் அடைந்தார். அலி என்று மைதானத்திலேயே அவர் மீது கோபமாக கத்தினார். அதன்பின் கடந்த போட்டியில் மதீஷ் பத்திரனா மீது கோபம் அடைந்தார்.
கண்கள் முழுக்க கோபத்தோடு நெற்றி சுருங்க பத்திரனா மிக கோபமாக காணப்பட்டார். இந்த கோபத்திற்கு பின் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
காரணம் 1
இது தொடர்பாக சிஎஸ்கேவில் நெருக்கமாக இருக்கும் நிர்வாகிகளிடம் விசாரித்ததில், தோனி பொதுவாக களத்தில் கோபம் அடைவார். ஆனால் என்ன அதை வெளியே காட்டமாட்டார். இக்கட்டான நேரத்தில் அவர் கூலாகவே இருப்பார்.
ஆனால் பீல்டர்கள், பவுலர்கள் தவறு செய்தால் அவர் கண்டிப்பாக கோபம் அடைவார். அப்படி அவர் அடைந்த கோபம்தான் தற்போது ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
கடந்த சில போட்டிகளாக சிஎஸ்கே பீல்டிங் சரியில்லை. சிஎஸ்கே பீல்டர்கள் சிலர் மோசமாக சொதப்புகிறார்கள். ருத்துராஜ் கூட கேட்ச் விடுகிறார். கடந்த சில போட்டிகளாக சிஎஸ்கே அதிக கேட்சுகளை விட்டுள்ளது. எப்போதும் கோபம் அடையாத தோனியே நேற்று மைதானத்தில் மொயின் அலியை பார்த்து கோபம் அடையும் அளவிற்கு நிலைமை மோசமானது.
அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி மைதானத்திற்கு வரும் முன் முறையாக கேட்ச் பயிற்சி செய்துவிட்டு வர வேண்டும் என்று இப்போதே ரசிகர்கள் அறிவுறுத்த தொடங்கி உள்ளனர்.
முக்கியமாக மகேஷ் தீக்சனா முறையாக பயிற்சி எடுத்துவிட்டு பீல்டிங் செய்ய வேண்டும். கடந்த சில போட்டிகளாக சிஎஸ்கே பீல்டிங் சொதப்பலாக இருந்தது என்று நெட்டிசன்கள் சிஎஸ்கே அணிக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இதை களத்திலும் உணர்ந்து இருக்கும் தோனி வீரர்கள் மீது கோபம் அடைகிறார்.
காரணம் 2
பொதுவாக தோனி பவுலர்களுக்கு சொல்லும் அறிவுரைகளை அப்படியே கேட்க வேண்டும். இல்லையென்றால் தோனிக்கு பிடிக்காது. சுயமாக மாற்றி போட்டால் தோனி கோபம் அடைவார். மதீஷ் பத்திரனா அப்படி சரியான முறையில் பவுலிங் போடாத காரணத்தால்தான் தோனி கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சீசனை வெற்றிபெற வேண்டும் என்பதில் தோனி தீர்க்கமாக இருக்கிறார். அதனால் அவர் கண்டிப்பாக சில கசப்பான, கண்டிப்பான முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது.
-
தல சேப்பாக்கத்தில் நடந்தால்.. அங்க ஈசிஆர் அதிரும்.. தோனியிடம் சிவகார்த்திகேயன் கேட்ட அந்த கேள்வி! -
ருதுராஜ் பந்தை இப்படி விளாசிட்டாரே.. சிஎஸ்கே ஜெர்சியை போட்டுட்டு வாங்க ஹசி.. தோனி கொடுத்த ரியாக்சன்! -
சிஎஸ்கேவை பாலோ செய்யும் காவ்யா மாறன்.. இஷான் கிஷனுக்கு அடித்த ஜாக்பாட்.. இதை கவனிச்சீங்களா! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications