கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் கட்டாயம் 7 நாள் தனிமை : தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த சூழலில் மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல்கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் கர்நாடகா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத் உள்பட பல்வேறு மாநில அரசுகள், கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று அறிவித்துள்ளன.

பரிசோதனை
இந்நிலையில் தமிழக அரசு கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

கோவிட் மையம்
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு அறிகுறி இருந்தால், கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானால் கோவிட் கேர் மையத்தில் தங்கவைக்கப்படுவர் என்றும் அறிவித்துள்ளது.

வெளிநாடுகள்
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் 72 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று கூறியுள்ள அரசு, கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

2வது அலை தாக்கம்
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா இரண்டாவது அலை பரவுவதாக அச்சம் நிலவுகிறது. ஏற்கனவே அமெரிக்கா இங்கிலாந்து, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளிலும் பாதிப்பு குறைவில்லை..அதிகரித்தபடி இருக்கிறது. இதையடுத்தே தமிழக அரசு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications