அரசு விரைவு பேருந்து பயணிகளுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு.. 150 ரூபாய் வரை உயரும் கட்டணம்.. எப்படி?
சென்னை: அரசு விரைவு பேருந்துகளில் கட்டண சலுகை நீக்கப்பட்டதால் பேருந்து கட்டணம் ரூ 50 முதல் 150 ரூபாய் வரை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தொலைதூரங்களுக்கு செல்ல மக்கள் ரயில் போக்குவரத்தையே அதிகம் நாடுகிறார்கள். அதில் இருக்கும் வசதிகளை போலவே ஏசி வசதி உள்ளிட்டவைகளை கொண்ட விரைவு பேருந்துகளை இயக்குவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் எளிய கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த பேருந்துகளில் வார நாட்களில் பயணம் செய்யும் போது 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை கட்டணம் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. அதே வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பயணம் செய்யும் போது அந்த கட்டண சலுகையும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில்தான் தமிழக போக்குவரத்து கழகம் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கோடை விடுமுறை முழுவதும் லீன் கட்டண முறை நீக்கப்படுகிறது.

இதற்கான உத்தரவை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த போக்குவரத்து துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு விரைவு பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போதிய வருவாய் ஈட்ட போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக வெளியான நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு கட்டண சலுகையும் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 முதல் 150 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் சற்று அதிருப்தியில் உள்ளனர். கோடை விடுமுறை முடிந்தவுடனாவது இந்த கட்டண சலுகை கிடைக்குமா இல்லை அப்படியே ரத்து செய்துவிடுவார்களா என்ற சந்தேகமும் இருக்கிறது. இதுகுறித்து அரசு மறுபரிசீலனை செய்து மீண்டும் கட்டண சலுகையை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை மக்கள் வைத்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications