பங்கு சந்தை முறைகேடு, சாதிவாரி கணக்கெடுப்பு வலியுறுத்தி.. சென்னையில் இன்று காங். ஆர்ப்பாட்டம்
சென்னை: பங்கு சந்தையில் அதானி முறைகேடு செய்ததாக புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இதனை முறையாக விசாரிக்காமல் செபியும் தவறு செய்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்நிலையில், செபி தலைவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னையில் இன்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில், "அதானியின் பங்குச் சந்தை மோசடி குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆதாரத்துடன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. இதில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி பூச்சும், அவரது கணவரும் சம்பந்தப்பட்டுள்ளது சமீபத்தில் ஆதாரங்களுடன் வெளி வந்திருக்கிறது. அரசாங்கத்தையே விலைக்கு வாங்கியுள்ள அதானிக்கு செபி தலைவரை விலைக்கு வாங்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

செபி தலைவரும், அவரது கணவரும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் ரகசியமாக முதலீடு செய்ததாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிதிகள் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, ரவுண்ட்-டிரிப்பிங் நிதிகள் மூலம் பங்குகளை உயர்த்த பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதானி குழுமத்தில் சந்தேகத்திற்குரிய பங்குகள் தொடர்பாக செபி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காமல் இருக்க செபி தலைவர் அதானியின் சகோதரருடன் தொழில் கூட்டாளியாக இருப்பது தான் காரணமாக உள்ளது. செபி தலைவரும், அவரது கணவரும் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதன் காரணமாகவே அதானி தொடர்புடைய பங்கு மோசடிக்கு எதிராக செபி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய பங்கு சந்தை என்பது ரூபாய் 25 லட்சம் கோடி முதல் ரூபாய் 30 லட்சம் கோடி வரை சந்தை மதிப்பு கொண்டது. முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு செபி அமைப்பிற்கு இருக்கிறது. அந்த அமைப்பே அதானி நிறுவனத்தோடு சேர்ந்து கொண்டு லாப நோக்கில் செயல்பட்டது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். உச்சநீதிமன்றமும் இந்த குற்றச்சாட்டை தன்னிச்சையாக முன்வந்து சிறப்பு புலனாய்வுக் குழு மூலமாக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சமூக நீதியை நோக்கமாகக் கொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கடந்த மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. மேலும், இடஒதுக்கீட்டு வரம்பை 50 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமலும், 2021 இல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மோடி அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதன்மூலம் சமூக நீதிக்கு எதிராக பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
அதானியின் பங்குச் சந்தை மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள செபியின் தலைவர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டு இதுகுறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரிக்க வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று மாலை 3.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகம் எதிரே எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று நாட்டையே உலுக்கி வருகிற பங்குச் சந்தை மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கவும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்ப உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று சாஸ்திரி பவனே திணறியது என்கிற வகையில் அமைய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜரின் 10 ஆண்டுகால ஆட்சி! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
“திருவள்ளுவர் கறுப்பா? சிவப்பா? தாடி இருந்ததா?” - பக்தவத்சலம் ஆட்சியில் நடந்த சர்ச்சை! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
கேரளா.. உள்ளே வரும் பாஜக! புதிய சர்வேயில் காங்கிரஸுக்கு ஷாக்.. அப்போ இடதுசாரிகள் நிலை என்ன? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு












Click it and Unblock the Notifications