ரபேல் ஆவணத்தை திருடி வெளியிட்ட திருட்டு கும்பல் உபதேசம் செய்யலாமா.. தமிழிசை அட்டாக்!
சென்னை: மோடி ஆட்சியில் மற்றொரு தன்னாட்சி அமைப்பு சீர்குலைக்கப்பட்டுள்ளதற்கு தேர்தல் ஆணையமே சாட்சி என்று குற்றம்சாட்டிய ப.சிதம்பரத்தை விமர்சித்து, தமிழக பாஜ மாநில தலைவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழிசை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அன்றைய தேர்தல்ஆணையர் கோபால்சாமி அவர்களின் ஆட்சேபணையும், கருத்தையும் மீறி நவீன்சாவ்லாவை தேர்தல் ஆணையராக நியமித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சம்பவத்தின் போது அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

கோபால்சாமியின் ஆட்சேபணையை மீறி, நவீன்சாவ்லா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட போது அமைதியாக இருந்து விட்டு, இன்று தேர்தல் ஆணையத்தை மோடி சிதைத்துவிட்டதாக நீங்களே சொல்வது வேடிக்கையாக உள்ளது.
மேலும் ரபேல் ஆவணத்தை திருடி வெளியிட்ட காங்கிரஸ் கும்பல் உபதேசம் செய்யலாமா என காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். தமிழிசை மேலும் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தேர்தல் ஆணையத்தை மோடி சீர்குலைத்துவிட்டார் என கூறும் சிதம்பரம் அவர்களே, 3 பேரில் 2 பேரின் கருத்து பெரும்பான்மையானது.
அதில் 3-வது நபர் வெளியில் வந்து பிரகடனப்படுத்துவதும், அதற்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதும்?.புரிகிறது அவர் யாருடைய ஏஜென்ட் என்பது?ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்? என சரமாரியாக சிதம்பரத்தை விமர்சித்துள்ளார் தமிழிசை.
அன்றைய தேர்தல்ஆணையர் கோபால்சாமி அவர்களின் ஆட்சேபணையும் கருத்தையும் மீறி நவீன்சாவ்லாவை தேர்தல் ஆணையராக நியமித்த அன்றைய காங்.ஆட்சியின் உள்துறைஅமைச்சர் சிதம்பரம் இன்று தேர்தல் ஆணையத்தை மோடி சிதைத்துவிட்டதாக சொல்வது வேடிக்கை.ரபேல்ஆவணத்தை திருடிவெளியிட்ட காங்.கும்பல் உபதேசம்செய்யலாமா?
— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) 19 May 2019
மோடி மற்றும் அமித்ஷா மீதான தேர்தல் விதிமீறல் புகாரில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மத்தியில் கருத்து வேறுபாடு எழுந்தது. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கருத்து தெரிவித்தார் அதிகாரிகளில் ஒருவரான அசோக் லவாசா.
ஆனால் மற்ற இரு அதிகாரிகள் அவரது பரிந்துரையை ஏற்கவில்லை. இதனால் ஏற்பட்ட சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கருத்து வேறுபாடு இயல்பானது. அனைவரும் ஒரே மாதிரி யோசிக்க முடியாது என கூறினார். தேர்தல் ஆணையத்தில் நடந்த இந்த கருத்து வேறுபாடுகளுக்கு மோடி அரசே காரணம் என எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் இது குறித்து பிரதமரை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடியாக தற்போது ட்விட்டரில் தமிழிசை மேற்கண்ட காரசாரமான கருத்துகளை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications