புனிதமற்ற திமுக கூட்டணியை வெல்வோம்… சொல்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
சென்னை: அதிமுக கூட்டணி சக்தி வாய்ந்த கூட்டணி என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி துணை முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி செய்வதற்காக, முதல் முறையாக கூட்டணித் தலைவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் கூடினர்.
பாஜக சார்பில் பியூஷ் கோயல், தமிழிசையும், பாமக சார்பில் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தியும் வருகை தந்தனர். அதேபோல்,சுதீஷ், ஜி.கே.வாசன், டாக்டர்.கிருஷ்ணசாமி, ஏ.சி. சண்முகம் உள்ளிட்ட இதர கூட்டணி தலைவர்களும் ஆஜராகினர்.
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், புனிதமற்ற திமுக கூட்டணியை வெல்வோம் என்றார். அதிமுக கூட்டணிக்கு தேமுதிகவுக்கு நன்றி சொல்கிறோம் என்றும், தேமுதிக தலைவர் விஜயகாந்த நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் எனவும் கூறினார்.












Click it and Unblock the Notifications