நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. உள்துறை செயலர், டிஜிபி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: காவல் ஆய்வாளர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி வெங்கட்ரமணன் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு காவல் ஆய்வாளராக பணியாற்றிய போது காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் என்பவர், ஆட்கொணர்வு மனு ஒன்றுக்கு அரசு வழக்கறிஞருக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறி குற்றம் சாட்டப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
துறை ரீதியான விசாரணைக்கு பிறகு அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஊதிய உயர்வு நிறுத்தம் செய்து திருநெல்வேலி சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டில் 6 மாதமாக குறைத்து டிஜிபி உத்தரவிட்டார். இது தொடர்பாக சந்திரசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தண்டனை விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் 2026 பதவி உயர்வு பட்டியலில் சந்திரசேகர் பெயரை சேர்க்க வேண்டும் என்று பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சந்திரசேகர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நேரில் ஆஜராக உத்தரவு
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவை இதுவரை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்து தடை உத்தரவும் பெறவில்லை. எனவே நீதிமன்ற அவமதிப்பு என்று கூறிய நீதிமன்றம், இது தொடர்பாக உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி வெங்கட்ரமணன் ஆகியோர் ஜனவரி 12 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், இடைப்பட்ட காலத்தில், உத்தரவுகளை அமல்படுத்தினாலோ, மேல் முறையீடு செய்தாலோ இருவரும் நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications