இன்னும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய விமானம்.. அடுத்தடுத்த விபத்தில் சிக்கும் இந்தோனேஷிய விமானங்கள்
சென்னை: கடந்த 2014-ஆம் ஆண்டு தெற்கு இந்திய பெருங்கடலில் மலேசிய விமானம் ஒன்று விழுந்ததாக கூறப்படும் நிலையில் அது குறித்து எந்த தகவலையும் கண்டுபிடிக்கவில்லை. இந்த நிலையில் இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து நடந்து வரும் விமான விபத்துகளால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் விமானம் ஒன்று சென்றது. அது இந்திய பெருங்கடலில் கடந்த 2014-ஆம் ஆண்டு விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 26 நாடுகள் தேடியும் அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த விமானத்தை விமானியே தற்கொலை செய்யும் நோக்கில் கடலில் செலுத்தியதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்து 4 ஆண்டுகளாகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் லயன்ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஜேடி 610 என்ற விமானம் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு இன்று 6.20 மணிக்கு புறப்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தின் தொடர்பு காலை 6.33 மணிக்கு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விமானம் ஜாவா தீவில் உள்ள கடற்பகுதியில் விழுந்துள்ளது. இதில் இருந்த 168 பயணிகளின் நிலை என்ன என்பது குறித்து தேடல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பப்புவா மாகாணம்
இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணம் தனாவில் இருந்து ஒக்சில் பகுதிக்கு சிறிய ரக விமானம் ஒன்று கடந்த ஆகஸ்டில் பயணம் செய்தது. அப்போது விமானம் ஒக்சிலில் தரையிறங்குவதற்கு முன்பாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு இழந்து மாயமானது. பின்னர் விசாரணையில் அது மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகிவிட்டனர்.

13 பேர் பலி
இந்தோனேஷியா ராணுவ விமானம் ஹெர்குலஸ் சி - 130 விமானம், திமிகா என்ற இடத்தில் இருந்து வாமேனா என்ற இடத்திற்கு உணவு பொருட்களை எடுத்து சென்ற போது பப்புவா மாகாணத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நொறுங்கி விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த 3 பைலட்டுகள், 10 ஊழியர்கள் என 13 பேர் பலியானார்கள்.

விபத்தில் சிக்கியது
கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் இருந்து பப்புவா புறப்பட்ட பயணிகள் த்ரிகானா விமானம் காணாமல் போன நிலையில் அது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இந்த விமானத்தில் பயணித்த 54 பேர் பலியாகினர். இந்த விபத்தில் 5 விமான ஊழியர்களும் இறந்துவிட்டனர்.

140 பேர் பலி
அதுபோல் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 192 பயணிகளுடன் பயணம் செய்த ஏர் ஏசியா விமானம் ஜாவா தீவுக்கு அருகில் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர். அதே ஆண்டு ஜூலை மாதம் ராணுவ விமானம் ஒன்று சுமத்ரா தீவுகளில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் விபத்துக்குள்ளானதில் 140 பேர் பலியாகிவிட்டனர்.

கடலில் விழுந்து விபத்து
இதுபோல் இந்தோனேஷியாவில் தொடர்ந்து விமானங்கள் மாயமாவதும் பின்னர் கடலில் அல்லது மலையில் விழுந்து விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகியுள்ள நிலையில் பயணிகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications