கோரமண்டல் ரயில் விபத்து: விடிய விடிய நடந்த மீட்பு பணி.. பயணிகளின் விவரம் சேகரிக்கும் பணி தீவிரம்
சென்னை: கோரமண்டல் ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் பலியாகியுள்ளனர். மீட்பு பணி விடிய விடிய நடந்து வரும் நிலையில், விபத்தில் சிக்கிய பயணிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் இருந்து மேற்கு வங்காள மாநிலத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. சென்னை செண்டிரல் - கொல்கத்ஹ்டாவின் ஷாலிமார் இடையே இயக்கப்படும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்படும். இந்த ரயில் நெற்று மாலை ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு வழக்கம் போல் கிளம்பியது.

இரவு சுமார் 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் பெங்களூரில் கொல்கத்தா சென்ற ஒரு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிருந்தது. அந்த ரயிலின் பெட்டிகள் ரெயிலின் சில பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன.
இதனால், அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், அந்த தண்டவாளத்தில் மீது மோதியது. இதில் ரயில் பெட்டிகள் உருக்குலைந்து ஒன்றன் மேன் ஒன்றாக கிடந்தன. இதில் பலரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைவாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

நாட்டையே இந்த ரயில் விபத்து உலுக்கியுள்ளது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்று வருகிறது. மீட்புக்குழுவினருடன் அப்பகுதி மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் பலியானவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் பயணித்த பயணிகள் விவரங்கள் கிடைக்கவில்லை . அது குறித்த தகவலையும் சேகரிக்கும் பணியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications