கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியவர்களையும் டெல்டா வகை வைரஸ் பாதிக்கும் - ஐசிஎம்ஆர் ஆய்வு
டெல்டா வகை வைரஸ் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்து கொண்டவர்களையும் பாதிக்கும் என்று ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் டெல்டா வைரஸ் பாதிக்கும் அபாயம் உள்ளதாக ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த 2019ஆம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டு காலமாக உலக மக்களை தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ், கப்பா என வைரஸ் பலவிதமாக உருமாறி வருகிறது.
உலகம் முழுவதும் 21 கோடி பேரை கொரோனா வைரஸ் தொட்டுள்ளது. 19 கோடி பேர் குணமடைந்திருந்தாலும் உலகம் முழுவதும் 44 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். பல கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தாலும் தினசரி பாதிப்பு 5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது.
கொரோனா முதல் அலைக்கு அமெரிக்கா முழுவதும் 3 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது அலையில் தப்பிய அமெரிக்காவில் மூன்றாவது அலை பரவத் தொடங்கியுள்ளது. தினசரியும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா இரண்டாவது அலைக்கு இந்தியா முழுவதும் 3 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 4 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.













Click it and Unblock the Notifications