காலையிலிருந்து 42 பேர்.. இந்தியாவில் அசுர வேகத்தில் கொரோனா.. மொத்தம் 300 பேர் பாதிப்பு.. அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் கொரோனா காரணமாக இன்று மட்டும் காலையிலிருந்து 42 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் இதுவரை 300 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    கொரோனா வைரஸ் பரவும் ஸ்டேஜ் விவரம்

    கொரோனா வைரஸ் உலகம் முழுக்க மிக மோசமான வேகத்தில் பரவி வருகிறது. உலகம் முழுக்க 275,276 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் . உலகம் முழுக்க 11384 பேர் இதனால் பலியாகி உள்ளனர். இத்தாலியில்தான் அதிகமாக இந்த வைரசால் மக்கள் பலியாகி உள்ளனர்.

    கொரோனாவால் இத்தாலியில் இதுவரை 4,032 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தியா எப்படி

    இந்தியா எப்படி

    இந்தியாவில் இதுவரை 300 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் நேற்று 63 பேர் இதனால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காரணமாக இன்று மட்டும் காலையிலிருந்து 42 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் இந்த வைரஸ் வேகம் எடுத்துள்ளது இதனால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 240 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2 பேர் மிக தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 23 பேர் இந்த வைரசில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    பலி

    பலி

    மொத்தமாக் 5 பேர் இந்தியா முழுக்க இந்த வைரஸால் பலியாகி உள்ளனர். டெல்லியில், கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த வைரஸால் மக்கள் பலியாகி உள்ளனர்.இந்தியாவில் மார்ச் 15ம் தேதிக்கு பின்புதான் கொரோனா வைரஸ் வேகம் எடுத்துள்ளது. மார்ச் 16 மற்றும் 17 தேதிகளில் கொரோனா வைரஸ் அதி வேகமாக பலரை தாக்கி உள்ளது.

    கேரளா நிலை

    கேரளா நிலை

    கேரளாவில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு மொத்தம் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. மகாராஷ்டிராவில்தான் இந்தியாவில் அதிக பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. அதன்படி அங்கு 52 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் இதுவரை 23 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தெலுங்கானா எப்படி

    தெலுங்கானா எப்படி

    தெலுங்கானாவில் இதுவரை 19 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானாவில் 18 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். டெல்லியில் 17 பேர் இதனால் பாதிக்கப்ட்டுள்ளனர். ராஜஸ்தானில் 17 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கர்நாடகாவில் 15 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகம் என்ன

    தமிழகம் என்ன

    லடாக்கில் 10 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 7 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிகரில் 5 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் 4 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 4 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இரண்டு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆந்திர பிரதேச நிலை

    ஆந்திர பிரதேச நிலை

    தமிழகத்தில் மொத்தம் 3 பேர் பாதித்து அதில் ஒருவர் குணப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் தமிழகத்தில் 1780 பேர் கண்காணிப்பில் உள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்டில் 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 2 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+