ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு.. வழக்கறிஞர்களுக்கு உதவி தொகை கோரி வழக்கு.. சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்
ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்க உத்தரவிட்ட கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்க உத்தரவிட்ட கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனோ நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றத்தின் செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வழக்கறிஞர்கள் மற்றும் குமாஸ்தாக்கள் வேலையில்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய வழக்கறிஞர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும், குமாஸ்தாக்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் உதவி தொகையை தமிழக அரசு வழங்க உத்தரவிட கோரி மூத்த வழக்கறிஞர் செல்லையா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை இன்று வீடியோ கால் மூலமாக விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வு, வழக்கு தொடர்பாக தமிழக அரசு, தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் ஆகியோர் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications