இந்தியாவில் 12 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.. தினம் தினம் புது உச்சம்
சென்னை: இந்தியாவில், கொரோனா வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை புதன்கிழமை 12 லட்சத்தை தாண்டியுள்ளது. பல மாநிலங்கள் ஒரே நாளில் புதிதாக நிறைய கேஸ்களை முதல் முறையாக பதிவு செய்துள்ளன.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து மட்டும் 17,000 புதிய கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நேற்று காலை 9 மணிக்கு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்புபடி, இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை 11,92,915 ஆக இருந்தது.
இந்த நிலையில், மாலையில் வெளியான அறிக்கையில், இது, 12,39496 என்ற அளவுக்கு அதிகரித்தது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா கேஸ்கள் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. அங்கு புதன்கிழமை மேலும் 10,576 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 5849 கேஸ்கள், கேரளாவில் 1038 கேஸ்கள் பதிவாகியுள்ளன. ஆந்திராவில் 6045 கேஸ்கள் பதிவாகியுள்ளன.
தற்போது, அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா, உலகின் மூன்றாவது மோசமான பாதிப்புக்குள்ளான நாடு என்ற நிலையில் உள்ளது.












Click it and Unblock the Notifications