தமிழகம்: லாக்டவுனில் இன்று அதிகாலை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்- தேநீர் கடைகள் மூடல்!
சென்னை: தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2 வார லாக்டவுனில் இன்று காலை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. தமிழகம் முழுவதும் தேநீர் கடைகள், காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் இன்று திறக்கப்படவில்லை.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. அதேபோல் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

2 வார லாக்டவுன்
இதனால் ஏற்கனவே தமிழகத்தில் 2 வார கால முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. சில தளர்வுகளுடன் கூடிய வகையில் இந்த முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இருந்தபோதும் முழுமையாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதித்தார்.

தேநீர் கடைகள் மூடல்
இதனையடுத்து இன்று அதிகாலை 4 மணி முதல் லாக்டவுனில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இந்த புதிய கட்டுப்பாடுகளின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் தேநீர் கடைகள் அடைக்கப்பட்டன. காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகளும் திறக்கப்படவில்லை.

மளிகை கடைகள் 4 மணிநேரம் மட்டும்
மேலும் தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி காலை 6 மணிக்கு திறக்கப்பட்டன. இந்த கடைகள் அனைத்தும் முன்பு பகல் 12 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தன. தற்போது முற்பகல் 10 மணி வரை மட்டுமே இந்த கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

நடைபாதை கடைகள் அனுமதி இல்லை
மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டதால் இவைகள் திறக்கப்படவில்லை. ATM, பெட்ரோல் டீசல் பங்குகள் ஆகியவை வழக்கம் போல செயல்படுகின்றன. ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்கப்படுகின்றன.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications