"நாங்க வர மாட்டோம்.. இங்கேயே இருக்கோம், மாத்தாதீங்க".. டாக்டர்களுடன் கொரோனா நோயாளிகள் வாதம் - வீடியோ
வேறு இடம் மாறி செல்ல தொற்று நோயாளிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்
சென்னை: "நாங்க ஹாஸ்டலுக்கு வரமாட்டோம்.. இங்கேயே எங்களுக்கு வசதியா இருக்கு.. ஏன் எங்களை வேறு இடத்துக்கு மாற்றுகிறீர்கள்" என்று கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சென்னை ஆஸ்பத்திரி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போதைக்கு மாநிலத்திலேயே அதிக பாதிப்பு உள்ளது சென்னைதான்.. அதிலும் வடசென்னையை நினைத்தாலே கலக்கமாக இருக்கிறது.
Recommended Video
வடசென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்... அப்படி சிகிச்சை பெறுபவர்களில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருப்போருக்கு, மன ரீதியான பிரச்சனை எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர்.
அந்த வகையில், தண்டையார்பேட்டை அரசு புறநகர் ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது.. இதனை "சின்ன ஸ்டான்லி" என்றும் சொல்லுவார்கள்.. இங்கு 97 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.. இவர்களை புழல் அடுத்துள்ள சூரப்பட்டு, வேலம்மாள் பள்ளி ஹாஸ்டலில் இடம் மாற்றம் செய்ய ஆஸ்பத்திரி நிர்வாகம் முயன்றது.
'கொரோனா ரெட் ஜோன்' சென்னையில் இருந்து இன்று 1200 பேர் மணிப்பூருக்கு சிறப்பு ரயிலில் பயணம்
இதற்கு நோயாளிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.. "நாங்க ஹாஸ்டலுக்கு எல்லாம் வரமாட்டோம்.. ஏன் எங்களை இடமாற்றம் செய்கிறீர்கள், இங்கேயே வசதியா இருக்கு" என்று வாக்குவாதம் செய்தனர்.. அதற்கு "அந்த இடம் நல்லா இருக்கும்.. நல்ல காற்றோட்டமா இருக்கு.. அப்படி இருந்தால்தான் உங்களுக்கு மன அழுத்தம் குறையும்" என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.. இதற்கு பிறகே தங்கள் எதிர்ப்பை கைவிட்டு 97 பேரும் கிளம்பி ஸ்கூல் ஹாஸ்டலுக்கு கிளம்பி செல்ல ஒத்துழைப்பு தந்தனர்.