தமிழகத்தில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மிக நீண்ட வரிசை- ரூ1,000-த்தை தொடும் ஆட்டிறைச்சி விலை!
சென்னை: தமிழகத்தில் சில நகரங்களில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மக்கள் தனிநபர் இடைவெளியுடன் மிக நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
Recommended Video
கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இன்று 12-வது நாளாக லாக்டவுன் நடைமுறையில் இருந்து வருகிறது.

லாக்டவுன் காலத்தில் வார இறுதிகளில் இறைச்சி கடைகளில்தான் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த வாரம் லாக்டவுன் காலத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் இறைச்சி கடைகளில் பெரும் கூட்டமாக கூடினர்.

இதனையடுத்து இந்த வாரம் பல நகரங்களில் இறைச்சி கடைகள் ஏப்ரல் 12-ந் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டிருக்கிறது. இருப்பினும் பல நகரங்களில் இன்று இறைச்சி கடைகள் திறந்திருந்தன.
சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களில் இறைச்சி கடைகள் முன்பாக இன்று காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இங்கு தனிநபர் பாதுகாப்பு இடைவெளியுடன் பொதுமக்கள் வரிசைகளில் இன்று இறைச்சி வாங்கினர்.

சில நகரங்களில் மைதானங்களில் மீன்சந்தை அமைக்கப்பட்டிருந்தன. அங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்று காலை 1 கிலோ ஆட்டிறைச்சி விலை ரூ800 முதல் ரூ1,000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications