சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு குறித்து ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துவிட்டது.

Coronavirus: Plus Two exams will be postpone in Tamilnadu?

இதனால் பல மாநிலங்களில் பல்வேறுவிதமான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் நாளை சட்டசபை தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

இந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளையும் ஒத்திவைப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை தலைமை செயலகத்தில் கல்வித்துறை முதன்மை செயலாளர் இது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக அரசு எந்த நேரத்திலும் முக்கிய அறிவிப்பை வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources said that Plus Two exams will be postpone in Tamilnadu due to the increasing of Coronavirus Case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X